Sunday 1 November 2020

1973 ல் கோவையில் நடை பெற்ற வெள்ளி விழா மாநாட்டில் பொதுச் செயலர் படைத்த மாநாட்டு அறிக்கை ஒரு காலப் பெட்டகம் . 25 ஆண்டுகளுக்கு முந்தைய நமது நிலையையும் , இயக்க வளர்ச்சியையும் ஒப்பிட்டு நோக்கும் . காலக் கண்ணாடி , அது மட்டுமல்ல . அன்றைய கோரிக்கை கல்வி வாரியம் அன்றைய கொள்கை அரசியல் சார்பற்றது . 25 ஆண்டுகளுக்கு முன்பே எத் தனை தெளிவான கண்ணோட்டத்துடன் பொதுச் செயலர் செ.மு. அறிக் கை படைத்துள்ளார் என்பது வரலாறு ! இதோ அந்த அறிக்கை ! நீங்களும் படித்து மகிழ மறுபதிப்பாகிறது

மாநில பொதுச் செயலாளர் அளித்த வெள்ளி விழா மாநாட்டு அறிக்கை

 1973 ஆம் ஆண்டு சனவரித்திங்கள் 21 ஆம் நாள் கோவை நகரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில வெள்ளி விழா மாநாட்டில் பொதுச் செயலரால் படைக்கப் பட்ட அறிக்கை , இன்று தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 25 ஆண்டுகளைக் கடந்து விட்டது . இவ்வியக்கம் தமிழ்நாடெங்கிலும் அங்கிங்கெனாது எங்கும் நிறைந்து காணப்படும் வளர்ச்சி பெற்ற மாபெரும் அமைப்பாகத் திகழ்கின்றது . ஆல் போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி உயர்ந்து நிற்கிறது . இதைக்கண்டு பூரிப்போரும் உண்டு , பொறாமை கொள்வோரும் உண்டு . இவ்வியக்கத்திற்கென உண்டாகி விட்ட 25 ஆண்டு கால வரலாறும் வரலாற்றுத் திருப்புமுனைகளும் , அதன் பயனாய் கேட்பாரற்று , மதிப்பாரற்று கிடந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர் சமுதாயம் பெற்ற நன்மைகளும் ஏராளம். தொடக்கப் பள்ளி ஆசிரியர் இனம் இவ்வியக்கத்தைப் பேணிக் காத்து அதன் பயனைப் பெற்றும் வருகிறது . தமிழ்நாட்டில் தொடக்கப் பள்ளியில் பணி புரியும் எந்த ஆசிரியனும் இவ்வியக்கத்தை அறியாமலில்லை , நான்கு சுவருக்குள்ளே இந்த நாட்டின் எதிர்காலத்தை , தலை விதியை ப் படைக்க வல்லது இச்சமுதாயம் . ஜெர்மானிய மக்களெல்லாம் தன்னைப் பாராட்டத்திட்டம் வகுத்த இட்லர் பயன்படுத்தியது ஆசிரியர்களைத்தான் . இதன் மூலம் தன் நாட்டை வளர்த்து உலகம் கண்டு அஞ்சிய தளபதியாய்த் திகழ்ந்தான் . ஏன் மறைந்த மாமேதை அறிஞர் அண்ணா சொன்னார் , மாநில ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய பின் , ஆசிரியர்கள் தான் இந்த ஆட்சி மாற்றத்திற்கு அடிப்படை வகுத்தவர்கள் . நான் என்றும் மறவேன் அவர்களை உள்ளத்திலே சுமந்து ஓர் உருவம் கோட்டையில் உலாவி வரும் என்பதை மறந்து விட வேண்டாம் என்றார்கள் . இவையெல்லாம் சிறப்புகள் . இவற்றைப் பேசுவதால் பயன் ஏதும் ஆகப் போவதில்லை . இவைகள் எல்லாம் உண்மைகள் என்பதற்காகவே குறிப்பிடுகிறேன் இயக்கத் தோற்றத்தையும் 25 ஆண்டு கால சாதனையின் பட்டியலையும் ஓரளவு தந்து விட்டு , இன்றைய அளவின் தேவைகளையும் , அரசு செய்ய வேண்டியவற்றையும் எடுத்துரைக்க விரும்புகிறேன்

Friday 10 July 2020

செ.மு.வின் பேரும் புகழும்.எழுதியவர்:- ஆர்.அருள்ராஜ் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்.

தர்மபுரி மாவட்டச் செயலாளர்
வை.பிரகலாதன்
அவர்களின் மகன் பாபு
என்பவருக்கு விருதுநகர் சிவகாசி
* ஜானகி அய்யன் நாடார்*கல்லூரியில்
எம்.எஸ்.சி.மைக்ரோ
பயாலஜி வகுப்புக்கு
இடம் கிடைக்க கல்லூரி
முதல்வர் அவர்களிடம்
கேட்டோம்.நான்(ஆர்.அருள்ராஜ்) தூத்துக்குடி மாவட்டச்
செயலர் என்றும்,அவர்
தர்மபுரி மாவட்டச்
செயலர் என்றும் அறிமுகம்
கப் படித்திக் கொண்டோம்.அப்பொழுது கல்லூரி முதல்வர்
நமது இயக்கம் பற்றியும்
பொதுச்செயலர் செ.மு பற்றியும் கேட்டறிந்தார்.மிகக் குறைந்த இடங்களே
ஒதுக்கப்பட்ட அந்தப்
பட்ட படிப்பிற்கு மனுக்கள் ஏராளமாக
குவிந்திருந்தது.நுழைவுத் தேர்வும் நடத்தப்பட்டது.நுழைவுத்
தேர்விலும் பாபு நன்கு
தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றுவிட்டான்.ஆனாலும் இடம் கிடைக்குமோ!கிடைக்காதோ!என்ற
ஐயம்.திடீரென எங்களுக்கு அழைப்பு
வந்தது.நானும்
(ஆர்.அருள்ராஜ்) பிரகலாதனும் முதல்வர்
அறைக்குள் சென்றோம்.
முதல்வர் அவர்கள்
பையனுக்கு இடம்
கொடுத்துள்ளேன்.
கல்லூரியில் சேர்ந்து
விடுங்கள் என்று சொன்ன போது எங்கள்
மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை.இது பொதுச்
செயலர்செ.மு.வுக்கு
கிடைத்த வெற்றி.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல
எங்களுக்கு அதில் ஒரு
துளி இடம் அவ்வளவுதான்.இதனுடைய பெரும் பங்கு
செ.முத்துசாமி
அவர்களையே சேரும்.
என்பதில் ஐயமில்லை.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்
தூத்துக்குடி மாவட்டச்
செயலாளர்.
தகவல்:-
செ.வடிவேலு

செ.மு.வின் அணுகுமுறையும் சாதுர்யமும்-எழுதியவர்:- ஆர்.அருள்ராஜ் தூத்துக்குடி*மாவட்ட செயலாளர்*

1998 மார்ச் மாதம்
பொதுச்செயலாளர்
செ.மு அவர்கள்
தூத்துக்குடி வந்திருந்தார்கள்.
அவரோடு மதுரை மாவட்டச் செயலாளர்
மு.கல்யாணி
சிவகங்கை மாவட்ட
செயலாளர்
சூ.அருள்சாமி
ஆகியோரும் வந்திருந்தனர்.தூத்துக்குடி துறைமுகம் சென்று
பார்க்க திட்டமிட்டு கார்
மூலம் தூத்துக்குடி
மாவட்டம் வட்டார பொறுப்பாளர்களையும்
சேர்த்துக்கொண்டு
துறைமுக அலுவலகம்
சென்றடைந்தோம்.
பொதுச்செயலர் செ.மு அவர்கள் உள்ளே செல்ல துறைமுக அலுவலரிடம்
அனுமதி கேட்டார்.ஆனால் அதிகாரி அவர்கள்
விடுதலைப் புலிகள்
காரணமாக அரசு
*அனுமதி கொடுக்கக்
கூடாது*என்று உத்தரவிட்டுள்ளது என
கூறினார். பின் நமது
பொதுச்செயலாளர் நான் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு சட்டமன்ற
மேனாள் மேலவை
உறுப்பினர்.எனவே
நாங்கள் எவ்வித இடையூறும் இன்றி பார்த்து வருகிறோம்
என்று தன்னுடைய
சாதுரிய அணுகுமுறை பேச்சால் *அனுமதி
கேட்டார்*.உடனே
துறைமுக அதிகாரிகள் அவர்கள் துறைமுகத்திற்குள்
செல்ல அனுமதி
கொடுத்தார்.எங்கள்
கார் துறைமுகம் கப்பல்
நிற்கும் இடம் வரைக்கும் சென்றது.
அங்கேஇத்தாலி நாட்டைச்சேர்ந்த பெரிய கப்பல் ஒன்று
நின்று கொண்டிருந்தது.
*பொதுச்செயலாளர்
செ.மு*அவர்கள்
கப்பல் கேப்டன்
அவர்களிடம் உள்ளே
செல்ல அனுமதி கேட்டார்.அனுமதி கிடைத்தது நாங்கள்
அனைவரும் மகிழ்ந்து கப்பல் உள்ளே சென்றோம்.
நமது பொதுச் செயலர்உடன் முதலில்
கேப்டன் அறைக்கு
சென்றோம்.நமது
பொதுச்செயலாளர்
கப்பல் கேப்டனோடு
ஆங்கிலத்தில்
பேசினார்.ஒவ்வொரு
வரையும் கேப்டனிடம்
அறிமுகப்படுத்தினார்.
கேப்டன் மகிழ்ந்தார்
அவரைப் பற்றியும்,
அவரது நாட்டைப் பற்றியும் பொதுச்செயலர் அவர்கள் கேட்டார்கள்.
கேப்டன் மிக மகிழ்ச்சியாக உற்சாகமாக பதிலளித்தார்.பின்பு
எங்களை மது சாப்பிடுகிறீர்களா?
என்று கேடாடார்.பொதுச்செயலர் எங்களுக்கு அப்படியொரு பழக்கம்
இல்லை என கூறினார்.
உடனே கேப்டன் ஆரஞ்சு,லெமன் ஜுஸ் பாக்கெட்டுகளை வழங்கினார்.அனைவரும் பருகினோம்.பின்பு
கப்பலில் அறை அறையாக, மேல் தளம்
கீழ் தளம் என பார்த்தோம் சுமார் ஒன்றரை மணி நேரம்
கப்பலை சுற்றிப்
பார்த்தோம்.பின்பு
அனைவரும் கேப்டனிடம்  விடை பெற்று புறப்பட்டோம்.
இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியை பொதுச்
செயலாளர் மூலம் தான்
பார்க்க முடிந்தது.அவ்வளவு
கெடுபிடியான தடை
இருந்த நேரத்தில்
எங்களுக்கு அனுமதி
கொடுத்த
துறைமுக. அலுவலரை மனதாரப்
பாராட்டினோம்
இதற்கெல்லாம் காரணம்
நமது பொதுச்செயலர்
செ.முத்துசாமி.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்
தூத்துக்குடி*மாவட்ட
செயலாளர்*
தகவல்:-
 செ.வடிவேலு

செ.மு.வின் போர் குணமும் சாதனையும் எழுதியவர்:- ஆ.பழனியாண்டி உப்பிலியபுரம்

995ல் உப்பிலியபுரம்
வட்டாரம் நாகைநல்லூர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்
தலைமை ஆசிரியராக
கே.ரெங்கராஜ்
என்பவரை பணியிறக்
கம் செய்த போது,இயக்கம் ஆர்த்தெழுந்து தட்டிக்
கேட்டது.நீதிமன்றம் சென்று  ஸ்டேடஸ்கோ ஆண்டி
பெற்று பணிபுரிய வைத்
ததற்காக 05-01-1996ல்
வெங்கடாஜலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில்*உதவிக் கல்விஅலுவலர் மற்றும்100 ஆசிரியர்கள்
மத்தியில் என் மீது
மாவட்டத் தொடக்கக்
கல்வி அலுவலர் விசாரணை
பணியில் எந்த குற்றமும் செய்யாத
என்னை வெள்ளாளப்பட்டி,எஸ்.
கோம்பை ஆகிய
ஓராசிரியர் பள்ளிக்கு மாறுதல்.
தீர்ப்பாயத்தில் வழக்கு இப்படி
171நாட்கள் பள்ளி
பணியின்றி
ஊதியம் இன்றி
இருந்த போது
செ.மு அரவணைப்பும்
என்மீது கொண்ட பாசமும் என்னைத்
தலைநிமிரவைத்தது 26-06-1996ல் உப்பிலியபுரம் ஊராட்சி
ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாறுதல் பெற்று தந்தார்.செ.மு
மீண்டும் 8 நாளில்
புடலாத்தி பள்ளிக்கு
மாறுதல்
செ.மு.வோடு
தொலைபேசியில்
தொடர்பு கொண்டு
குடும்பத்தோடு
எரிந்து போகட்டுமா
என்று கேட்ட போது
பள்ளியிலிருந்து
நியாக வரக்கூடாது
உன் பிணம் தான்
வெளியே வரவேண்டும்
இந்த செ.மு.வா
* அந்த AEO வா பார்த்து*
விடலாம் ஒரு கை என்ற
ஆவேச கட்டளை
எனக்கு.
 தொடக்கக் கல்வி இயக்குநரோடு
காரசாரமான
வாக்குவாதம்
இயக்குநர் கட்டிடத்தில்
பெரும் கூட்டம் கூடியது
குரலை உயர்த்தி
மாறுதல் ஆணையை
இரத்து செய்யாவிட்டால்
கொடியன் குளத்தில்
ஏற்பட்டது போல
உப்பிலியபுரத்தில்
தலைமையேற்று
நடத்தப்போகிறேன்
இந்த செ.மு வா
தொடக்கக் கல்வி
இயக்குநராக ஒரு கை
பார்த்து விடலாம்
நாளைக்கு.என
உணர்ச்சிப் பெருக்கோடு
செ.மு கேட்க.அருகாமை
அறையில் இருந்த
இயக்குநர் டாக்டர்
பழனிவேல் அவர்கள்
செ.மு வுக்கு சமாதானம் கூறி
மாறுதல் ஆணையை
தொடக்கக் கல்வி
இயக்குநரால் இரத்து
செய்ய வைத்தவர்
தனியாசிரியர்
பிரச்சனையானாலும்
ஒட்டு மொத்த ஆசிரியர்கள் பிரச்சனையானாலும்
தீர்வு காண்பதில்
செ.மு வுக்கு நிகர் செ.மு வே
அவர் எடுத்த பிரச்சனைகள்
கோரிக்கைகள் தீர்வு காண்பதில்
தோல்வி கண்டதாக
சரித்திரம் இல்லை
வெற்றி கண்ட சரித்திர
நாயகனாக
தமிழக ஆசிரியர்களுக்கு
தோன்றினார் செ.மு1969முதல்2000 ஆண்டு
வரை எத்தனையோ
போராட்டங்களை
ஆசிரியர்களுக்காக
நடத்தி சேதாரமின்றி,
ஊதிய இழப்பின்றி,
ஒட்டு மொத்த ஆசிரியர்
சமுதாயத்தை காப்பாற்றியவர் வரிசையில் உலக அளவில் தேடினால்
அதில் முதல் நிலையில்
இருப்பவர்
நமது செ.மு. அவர்களே.அவரது
சேவைகள் ஆசிரியர்
சமுதாயத்திற்கு
மகத்தானது.
தியாகம் மலைபோன்றது
எதையும் சாதிக்க
வேண்டும் என்ற துடிப்பு
எழுச்சி மனப்பான்மை
போராட்ட குணம்
ஆசிரியர்களை
தன்பால் கவர்ந்து
இழுக்கும் பேச்சாற்றல்
கொண்டவர் தான்செ.மு.
தமிழகத்தில் கல்வி தரம் குறைந்து விட்டதென தமிழக
அரசியல் வாதிகளால்
1990ல் விமர்சிக்கப்பட்ட
போது,தமிழக ஆசிரியர்
பெருமக்களைப் பார்த்து
இருகரம் கூப்பி
 One Step Forward
in the Class Room
பள்ளிக்கு முன் சென்று
பின்வர முதன் முதலில்
குரல் கொடுத்தவர்
இந்த செ.மு.அவர்களே.
அவர் விடுத்த வேண்டுகோள் ஆசிரியர் மத்தியில்
தன்னுடைய பணியை
செவ்வனே செய்ய
வேண்டும் என்ற உணர்ச்சிப்பெருக்கு
ஆசிரியர் மத்தியில்
ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள
தொகுப்பூதிய
ஆசிரியர்களுக்காக
வழக்குத் தொடுத்து
சென்னை உயர்நீதி
மன்றத்தில் 176 பக்க
தீர்ப்பையும் 01-01-1971
ஆசிரியர் பிரச்சனைக்கு
நீதிமன்றம் சென்று
தீர்வு கண்டு அரசிடம்
ஆணை பெற்று நிலுவை
ஊதியம் பெற வழிவகை
செய்தவர் தான் இந்த
இயக்கத்தின்
பொதுச் செயலாளர்
செ.முத்துசாமி.
13 ஆண்டுகள் சட்ட
மேலவை உறுப்பினர்
பணியில் 5 நிமிடம்
5 மணிக்கு நேரம்
ஆனாலும் ஆசிரியர்
பிரச்சனையில் தொடங்கி
ஆசிரியர் பிரச்சனையில்
பாராட்டப்பட்டவர் தான்
இந்த செ.முத்துசாமி
தனது மேலவைப்
பணியில் டாக்டர்
கலைஞரோடு
புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரோடும்
சட்ட மேலவையில்
நேர் நேர் எதிர் வாதம்
செய்து ஆசிரியர்களுக்காக
பல அரசாணைகளை
பெற்று தந்தவர் செ.மு.
உலகில் இருபெரும்
வல்லரசு நாடுகளான
ருசியா,அமெரிக்கா
ஆகிய நாடுகளில்
சுற்றுப்பயணம் செய்து
அவ்விரு நாடுகளில்
உள்ள ஆசிரியர்
மாணவர் நிலை
கல்வித்தரம்,கட்டிக்
காக்கப்படும் முறைகள்
நிர்வகிக்கப்படும் நெறி
முறைகள் ஆகியவற்றை
ஆசிரியர் பேரணி இதழ்
வாயிலாக தமிழக
ஆசிரியர்களுக்கு
கட்டுரை வாயிலாக
அறியச் செய்தவர் தான்
இந்த செயல் வீரர் செ.மு.1969முதல்2000 ஆண்டு
வரை எத்தனையோ
போராட்டங்களை
ஆசிரியர்களுக்காக
நடத்தி சேதாரமின்றி,
ஊதிய இழப்பின்றி,
ஒட்டு மொத்த ஆசிரியர்
சமுதாயத்தை காப்பாற்றியவர் வரிசையில் உலக அளவில் தேடினால்
அதில் முதல் நிலையில்
இருப்பவர்
நமது செ.மு. அவர்களே.அவரது
சேவைகள் ஆசிரியர்
சமுதாயத்திற்கு
மகத்தானது.
தியாகம் மலைபோன்றது
எதையும் சாதிக்க
வேண்டும் என்ற துடிப்பு
எழுச்சி மனப்பான்மை
போராட்ட குணம்
ஆசிரியர்களை
தன்பால் கவர்ந்து
இழுக்கும் பேச்சாற்றல்
கொண்டவர் தான்செ.மு.
தமிழகத்தில் கல்வி தரம் குறைந்து விட்டதென தமிழக
அரசியல் வாதிகளால்
1990ல் விமர்சிக்கப்பட்ட
போது,தமிழக ஆசிரியர்
பெருமக்களைப் பார்த்து
இருகரம் கூப்பி
 One Step Forward
in the Class Room
பள்ளிக்கு முன் சென்று
பின்வர முதன் முதலில்
குரல் கொடுத்தவர்
இந்த செ.மு.அவர்களே.
அவர் விடுத்த வேண்டுகோள் ஆசிரியர் மத்தியில்
தன்னுடைய பணியை
செவ்வனே செய்ய
வேண்டும் என்ற உணர்ச்சிப்பெருக்கு
ஆசிரியர் மத்தியில்
ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ள
தொகுப்பூதிய
ஆசிரியர்களுக்காக
வழக்குத் தொடுத்து
சென்னை உயர்நீதி
மன்றத்தில் 176 பக்க
தீர்ப்பையும் 01-01-1971
ஆசிரியர் பிரச்சனைக்கு
நீதிமன்றம் சென்று
தீர்வு கண்டு அரசிடம்
ஆணை பெற்று நிலுவை
ஊதியம் பெற வழிவகை
செய்தவர் தான் இந்த
இயக்கத்தின்
பொதுச் செயலாளர்
செ.முத்துசாமி.
13 ஆண்டுகள் சட்ட
மேலவை உறுப்பினர்
பணியில் 5 நிமிடம்
5 மணிக்கு நேரம்
ஆனாலும் ஆசிரியர்
பிரச்சனையில் தொடங்கி
ஆசிரியர் பிரச்சனையில்
பாராட்டப்பட்டவர் தான்
இந்த செ.முத்துசாமி
தனது மேலவைப்
பணியில் டாக்டர்
கலைஞரோடு
புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆரோடும்
சட்ட மேலவையில்
நேர் நேர் எதிர் வாதம்
செய்து ஆசிரியர்களுக்காக
பல அரசாணைகளை
பெற்று தந்தவர் செ.மு.
உலகில் இருபெரும்
வல்லரசு நாடுகளான
ருசியா,அமெரிக்கா
ஆகிய நாடுகளில்
சுற்றுப்பயணம் செய்து
அவ்விரு நாடுகளில்
உள்ள ஆசிரியர்
மாணவர் நிலை
கல்வித்தரம்,கட்டிக்
காக்கப்படும் முறைகள்
நிர்வகிக்கப்படும் நெறி
முறைகள் ஆகியவற்றை
ஆசிரியர் பேரணி இதழ்
வாயிலாக தமிழக
ஆசிரியர்களுக்கு
கட்டுரை வாயிலாக
அறியச் செய்தவர் தான்
இந்த செயல் வீரர் செ.மு.
  (15வதுமாநில மாநாடு
சிறப்பு மலரிலிருந்து)
தகவல்:-
செ.வடிவேலு.

குறள் நெறிக் குணாளன் செ.மு_எழுதியவர்:- அ.இராமசாமி கடலூர் மாவட்ட தலைவர்

பொதுத் தொண்டு
செய்பவர்கள் எவ்வாறு
இருக்க வேண்டும்
என்பதை வள்ளுவர்
கூறும் போது
குடி செய்வார்க்கில்லை
பருவம் மடி செய்து
மானங்  கருதக் கெடும் என்று கூறுகிறார்.
அதாவது மக்களுக்கு
நன்மை செய்ய வேண்டும்
என்று ஒருவன்‌ நினைத்தால்
அதற்கு காலமோ நேரமோ பார்ப்பது
தவறு மானம் மரியாதை இவற்றைப்
பற்றி சிந்திக்காமல்
தொண்டாற்ற வேண்டும்
எனக் கூறுகிறார்
மேற்கண்ட குறளின்
கருத்துக்கு ஏற்ப தன்னுடைய
பொது வாழ்க்கையை
அமைத்துக் கொண்டவர்
செயல் வீரர் செ.முத்துசாமி என்பது
குன்று மேலிட்ட விளக்காகும்.
சாதனை:-
எல்லா காரியங்களும்
தெய்வத்தால் தான்
ஆகிறது என்று சொல்லப்பட்டாலும்
உண்மை நடப்பு என்ன வென்றால்,மனிதனுடைய,முயற்சியும்,செய்கையும் இருந்தால்தான் பயன் உண்டாகும்.
வெற்றி கிட்டும்.நினைத்ததை
அடையமுடியும் என்பதை குறள் காட்டுகிறது.
தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சிதன்
மெய் வருத்திக் கூலி
தரும்.என்ற குறளுக்கு ஏற்ப
எண்ணற்ற சாதனைகள்
பயன்களை
ஆசியர் சமுதாயத்திற்கு
பெற்றுத் தந்த சாதனை
யாளர் செ.முத்துசாமி.என்பதும்
உள்ளங்கை நெல்லிக்கனியாகும்
சான்று ஒரு சில அறிதல் வேண்டும்.
மத்திய அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம்
தமிழக ஆசிரியர்களுக்கு
பெற்று தந்தார்.
1 3/4 நாள் ஈட்டிய
விடுப்பு இன்றைக்கு
15 நாட்கள் வீடு கட்ட
இருசக்கர வாகனங்கள்
வாங்க அரசு கடன் சலுகை.
பல்வேறு நிலைகளில்
பதவி உயர்வு எல்லாவற்றிற்கும்
மேலாக உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்கள் பதவி
உயர்வு இன்னும்
எண்ணற்றவை
நீடு வாழ்வார்:-
நல்லொழுக்கத்தை
மேற்கொண்டவர்,
ஐம்புலன்களையும்
அடக்கி வாழ்பவர்
நீண்ட நாட்கள் வாழ்வார் எனக் கூறுகின்றது வள்ளுவம்
பொறிவாயில் அய்ந்தவித்தான்
மொய்தீன் ஒழுக்கம்
நெறி நின்றார் நீடு வாழ்வார் என்பது குறள்.
மக்கள் நீடுவாழ,அதாவது
நீண்டநாள் உயிர் வாழ
வேண்டும் என்பதையே
கருத்தாகக் கொண்டதாகும்.
மனிதனுக்கு உண்டான
ஐம்பொறிகளையும்
அடக்கி தன் இச்சைப்படி
செலவிடாமல்,கேடில்லாத தன்மையில்
உண்மையான  ஒழுக்கத்தோடு
நடந்து கொள்கிறவனது வாழ்வு
நீண்ட நாளைக்கு
நிலைபெறும் என்பதே
வள்ளுவர் கூறும்
வாழ்க்கை நெறியாகும்
மேற்கண்ட குறள் வழி
வாழ்ந்து வரும் ஆசிரியரினப்
போராளி செயல் வீரர்
செ.முத்துசாமி அவர்கள் நீடு வாழ்க
விழைவோமாக.
'உள்ளத்தனையது உயர்வு" என வள்ளுவர் கூறுகின்றார்.அதற்கு ஏற்ப
செயல்வீரர் செ.முத்துசாமி அவர்கள்.
நல்ல உள்ளமும்,
தூய தொண்டும்
பெற்றிருப்பதால்
இல்லறத்திலும்,
பொருட்செல்வத்திலும்*
உயர்ந்து நிற்கின்றார்
"வாழ்க அவர் தம் உள்ளம்
வளர்க அவருடைய
சமுதாயப்பணி".
எழுதியவர்:-
அ.இராமசாமி
கடலூர் மாவட்ட தலைவர்
(பொன்விழா மலரிலிருந்து 07-10-1995)
தகவல்:-
செ.வடிவேலு