Friday 10 July 2020

செ.மு.வின் அணுகுமுறையும் சாதுர்யமும்-எழுதியவர்:- ஆர்.அருள்ராஜ் தூத்துக்குடி*மாவட்ட செயலாளர்*

1998 மார்ச் மாதம்
பொதுச்செயலாளர்
செ.மு அவர்கள்
தூத்துக்குடி வந்திருந்தார்கள்.
அவரோடு மதுரை மாவட்டச் செயலாளர்
மு.கல்யாணி
சிவகங்கை மாவட்ட
செயலாளர்
சூ.அருள்சாமி
ஆகியோரும் வந்திருந்தனர்.தூத்துக்குடி துறைமுகம் சென்று
பார்க்க திட்டமிட்டு கார்
மூலம் தூத்துக்குடி
மாவட்டம் வட்டார பொறுப்பாளர்களையும்
சேர்த்துக்கொண்டு
துறைமுக அலுவலகம்
சென்றடைந்தோம்.
பொதுச்செயலர் செ.மு அவர்கள் உள்ளே செல்ல துறைமுக அலுவலரிடம்
அனுமதி கேட்டார்.ஆனால் அதிகாரி அவர்கள்
விடுதலைப் புலிகள்
காரணமாக அரசு
*அனுமதி கொடுக்கக்
கூடாது*என்று உத்தரவிட்டுள்ளது என
கூறினார். பின் நமது
பொதுச்செயலாளர் நான் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு சட்டமன்ற
மேனாள் மேலவை
உறுப்பினர்.எனவே
நாங்கள் எவ்வித இடையூறும் இன்றி பார்த்து வருகிறோம்
என்று தன்னுடைய
சாதுரிய அணுகுமுறை பேச்சால் *அனுமதி
கேட்டார்*.உடனே
துறைமுக அதிகாரிகள் அவர்கள் துறைமுகத்திற்குள்
செல்ல அனுமதி
கொடுத்தார்.எங்கள்
கார் துறைமுகம் கப்பல்
நிற்கும் இடம் வரைக்கும் சென்றது.
அங்கேஇத்தாலி நாட்டைச்சேர்ந்த பெரிய கப்பல் ஒன்று
நின்று கொண்டிருந்தது.
*பொதுச்செயலாளர்
செ.மு*அவர்கள்
கப்பல் கேப்டன்
அவர்களிடம் உள்ளே
செல்ல அனுமதி கேட்டார்.அனுமதி கிடைத்தது நாங்கள்
அனைவரும் மகிழ்ந்து கப்பல் உள்ளே சென்றோம்.
நமது பொதுச் செயலர்உடன் முதலில்
கேப்டன் அறைக்கு
சென்றோம்.நமது
பொதுச்செயலாளர்
கப்பல் கேப்டனோடு
ஆங்கிலத்தில்
பேசினார்.ஒவ்வொரு
வரையும் கேப்டனிடம்
அறிமுகப்படுத்தினார்.
கேப்டன் மகிழ்ந்தார்
அவரைப் பற்றியும்,
அவரது நாட்டைப் பற்றியும் பொதுச்செயலர் அவர்கள் கேட்டார்கள்.
கேப்டன் மிக மகிழ்ச்சியாக உற்சாகமாக பதிலளித்தார்.பின்பு
எங்களை மது சாப்பிடுகிறீர்களா?
என்று கேடாடார்.பொதுச்செயலர் எங்களுக்கு அப்படியொரு பழக்கம்
இல்லை என கூறினார்.
உடனே கேப்டன் ஆரஞ்சு,லெமன் ஜுஸ் பாக்கெட்டுகளை வழங்கினார்.அனைவரும் பருகினோம்.பின்பு
கப்பலில் அறை அறையாக, மேல் தளம்
கீழ் தளம் என பார்த்தோம் சுமார் ஒன்றரை மணி நேரம்
கப்பலை சுற்றிப்
பார்த்தோம்.பின்பு
அனைவரும் கேப்டனிடம்  விடை பெற்று புறப்பட்டோம்.
இப்படிப் பட்ட ஒரு நிகழ்ச்சியை பொதுச்
செயலாளர் மூலம் தான்
பார்க்க முடிந்தது.அவ்வளவு
கெடுபிடியான தடை
இருந்த நேரத்தில்
எங்களுக்கு அனுமதி
கொடுத்த
துறைமுக. அலுவலரை மனதாரப்
பாராட்டினோம்
இதற்கெல்லாம் காரணம்
நமது பொதுச்செயலர்
செ.முத்துசாமி.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்
தூத்துக்குடி*மாவட்ட
செயலாளர்*
தகவல்:-
 செ.வடிவேலு

No comments:

Post a Comment