Friday 10 July 2020

குறள் நெறிக் குணாளன் செ.மு_எழுதியவர்:- அ.இராமசாமி கடலூர் மாவட்ட தலைவர்

பொதுத் தொண்டு
செய்பவர்கள் எவ்வாறு
இருக்க வேண்டும்
என்பதை வள்ளுவர்
கூறும் போது
குடி செய்வார்க்கில்லை
பருவம் மடி செய்து
மானங்  கருதக் கெடும் என்று கூறுகிறார்.
அதாவது மக்களுக்கு
நன்மை செய்ய வேண்டும்
என்று ஒருவன்‌ நினைத்தால்
அதற்கு காலமோ நேரமோ பார்ப்பது
தவறு மானம் மரியாதை இவற்றைப்
பற்றி சிந்திக்காமல்
தொண்டாற்ற வேண்டும்
எனக் கூறுகிறார்
மேற்கண்ட குறளின்
கருத்துக்கு ஏற்ப தன்னுடைய
பொது வாழ்க்கையை
அமைத்துக் கொண்டவர்
செயல் வீரர் செ.முத்துசாமி என்பது
குன்று மேலிட்ட விளக்காகும்.
சாதனை:-
எல்லா காரியங்களும்
தெய்வத்தால் தான்
ஆகிறது என்று சொல்லப்பட்டாலும்
உண்மை நடப்பு என்ன வென்றால்,மனிதனுடைய,முயற்சியும்,செய்கையும் இருந்தால்தான் பயன் உண்டாகும்.
வெற்றி கிட்டும்.நினைத்ததை
அடையமுடியும் என்பதை குறள் காட்டுகிறது.
தெய்வத்தால் ஆகாது
எனினும் முயற்சிதன்
மெய் வருத்திக் கூலி
தரும்.என்ற குறளுக்கு ஏற்ப
எண்ணற்ற சாதனைகள்
பயன்களை
ஆசியர் சமுதாயத்திற்கு
பெற்றுத் தந்த சாதனை
யாளர் செ.முத்துசாமி.என்பதும்
உள்ளங்கை நெல்லிக்கனியாகும்
சான்று ஒரு சில அறிதல் வேண்டும்.
மத்திய அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம்
தமிழக ஆசிரியர்களுக்கு
பெற்று தந்தார்.
1 3/4 நாள் ஈட்டிய
விடுப்பு இன்றைக்கு
15 நாட்கள் வீடு கட்ட
இருசக்கர வாகனங்கள்
வாங்க அரசு கடன் சலுகை.
பல்வேறு நிலைகளில்
பதவி உயர்வு எல்லாவற்றிற்கும்
மேலாக உதவி தொடக்கக் கல்வி
அலுவலர்கள் பதவி
உயர்வு இன்னும்
எண்ணற்றவை
நீடு வாழ்வார்:-
நல்லொழுக்கத்தை
மேற்கொண்டவர்,
ஐம்புலன்களையும்
அடக்கி வாழ்பவர்
நீண்ட நாட்கள் வாழ்வார் எனக் கூறுகின்றது வள்ளுவம்
பொறிவாயில் அய்ந்தவித்தான்
மொய்தீன் ஒழுக்கம்
நெறி நின்றார் நீடு வாழ்வார் என்பது குறள்.
மக்கள் நீடுவாழ,அதாவது
நீண்டநாள் உயிர் வாழ
வேண்டும் என்பதையே
கருத்தாகக் கொண்டதாகும்.
மனிதனுக்கு உண்டான
ஐம்பொறிகளையும்
அடக்கி தன் இச்சைப்படி
செலவிடாமல்,கேடில்லாத தன்மையில்
உண்மையான  ஒழுக்கத்தோடு
நடந்து கொள்கிறவனது வாழ்வு
நீண்ட நாளைக்கு
நிலைபெறும் என்பதே
வள்ளுவர் கூறும்
வாழ்க்கை நெறியாகும்
மேற்கண்ட குறள் வழி
வாழ்ந்து வரும் ஆசிரியரினப்
போராளி செயல் வீரர்
செ.முத்துசாமி அவர்கள் நீடு வாழ்க
விழைவோமாக.
'உள்ளத்தனையது உயர்வு" என வள்ளுவர் கூறுகின்றார்.அதற்கு ஏற்ப
செயல்வீரர் செ.முத்துசாமி அவர்கள்.
நல்ல உள்ளமும்,
தூய தொண்டும்
பெற்றிருப்பதால்
இல்லறத்திலும்,
பொருட்செல்வத்திலும்*
உயர்ந்து நிற்கின்றார்
"வாழ்க அவர் தம் உள்ளம்
வளர்க அவருடைய
சமுதாயப்பணி".
எழுதியவர்:-
அ.இராமசாமி
கடலூர் மாவட்ட தலைவர்
(பொன்விழா மலரிலிருந்து 07-10-1995)
தகவல்:-
செ.வடிவேலு

No comments:

Post a Comment