Friday 10 July 2020

செ.மு.வின் பேரும் புகழும்.எழுதியவர்:- ஆர்.அருள்ராஜ் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்.

தர்மபுரி மாவட்டச் செயலாளர்
வை.பிரகலாதன்
அவர்களின் மகன் பாபு
என்பவருக்கு விருதுநகர் சிவகாசி
* ஜானகி அய்யன் நாடார்*கல்லூரியில்
எம்.எஸ்.சி.மைக்ரோ
பயாலஜி வகுப்புக்கு
இடம் கிடைக்க கல்லூரி
முதல்வர் அவர்களிடம்
கேட்டோம்.நான்(ஆர்.அருள்ராஜ்) தூத்துக்குடி மாவட்டச்
செயலர் என்றும்,அவர்
தர்மபுரி மாவட்டச்
செயலர் என்றும் அறிமுகம்
கப் படித்திக் கொண்டோம்.அப்பொழுது கல்லூரி முதல்வர்
நமது இயக்கம் பற்றியும்
பொதுச்செயலர் செ.மு பற்றியும் கேட்டறிந்தார்.மிகக் குறைந்த இடங்களே
ஒதுக்கப்பட்ட அந்தப்
பட்ட படிப்பிற்கு மனுக்கள் ஏராளமாக
குவிந்திருந்தது.நுழைவுத் தேர்வும் நடத்தப்பட்டது.நுழைவுத்
தேர்விலும் பாபு நன்கு
தேர்வு எழுதி தேர்ச்சி
பெற்றுவிட்டான்.ஆனாலும் இடம் கிடைக்குமோ!கிடைக்காதோ!என்ற
ஐயம்.திடீரென எங்களுக்கு அழைப்பு
வந்தது.நானும்
(ஆர்.அருள்ராஜ்) பிரகலாதனும் முதல்வர்
அறைக்குள் சென்றோம்.
முதல்வர் அவர்கள்
பையனுக்கு இடம்
கொடுத்துள்ளேன்.
கல்லூரியில் சேர்ந்து
விடுங்கள் என்று சொன்ன போது எங்கள்
மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை.இது பொதுச்
செயலர்செ.மு.வுக்கு
கிடைத்த வெற்றி.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பது போல
எங்களுக்கு அதில் ஒரு
துளி இடம் அவ்வளவுதான்.இதனுடைய பெரும் பங்கு
செ.முத்துசாமி
அவர்களையே சேரும்.
என்பதில் ஐயமில்லை.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்
தூத்துக்குடி மாவட்டச்
செயலாளர்.
தகவல்:-
செ.வடிவேலு

No comments:

Post a Comment