Monday 3 June 2013

பாலியல் தொல்லைகளை தடுக்க பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் நியமனம்-


பாலியல் தொல்லைகளை தடுக்க பெண்கள் பள்ளிகளில் ஆசிரியைகள் நியமனம்-

தமிழக அரசுபெண்கள் பள்ளிகளில் நடக்கும் பாலியல் தொந்தரவுகளை தடுத்து நிறுத்தும் பொருட்டு, பெண்கள் பள்ளிகளில் ஆசிரியை, தலைமை ஆசிரியை என அனைவரும் பெண்களாகவே நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பெண்கள் பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் பெண்கள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.

இதுகுறித்து மே 28 ஆம் தேதி தமிழக அரசாணை 145 இல் புதிதாக பணி நியமனம் மற்றும் காலி பணியிடங்களை நிரப்புவதில் அரசு பெண்கள் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளையே நியமிக்க வேண்டும், தலைமை ஆசிரியைகளும் பெண்களாகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவையே பின்பற்றி அரசு ஆண்கள் பள்ளியில் ஆண் ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இருபாலரும் சேர்ந்து படிக்கும் பள்ளிகளில் பெண் ஆசிரியைகளுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு சமீபத்தில் நடந்த கவுன்சிலிங்கின்போது கடைசி நாளில் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இனி நடைபெரும் கவுன்சிலிங்களில் அமல்படுத்தப்படும். மேலும் பதவி உயர்வு, புதிய ஆசிரியர்கள் நியமனம், பணி இட மாற்றம் ஆகியவற்றில் இந்த உத்தரவு பின்பற்றப்படும் என்றார். பள்ளிகளில் மாணவிகளுக்கு கொடுக்கப்படும் பாலியல் தொல்லைகளை தடுக்கும் வகையில் அரசின் இந்த உத்தரவு வரவேற்க கூடியது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.

Monday 25 March 2013

செயல்வீரர் செமு


முகப்புஇளமைப்பருவம்இயக்கம்மேலவை உறுப்பினர்சான்றோரின் பார்வையில்அயல்நாட்டுப் பயணம்எதிர்காலத் திட்டங்கள்




"எமக்குத் தொழில், ஆசிரியர்க்கு உழைத்தல்
இமைப்பொழுதும் சோராது இருத்தல்"


செயல்வீரர் செமு , இயக்கச்செம்மல் என நல்லோர்களால் போற்றப்படும் செ.முத்துசாமி - தமிழ்நாடு நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் மரூர்பட்டி என்ற சிற்றூரில் 10-03-1937 பிறந்தார். தன்னுடைய பேச்சாற்றலாலும், சீரிய சிந்தனையாளும் 1968 முதல் ஆசிரியர் கூட்டணியில் பொதுச்செயலாளராக பணியாற்றுகிறார். மேலும்1970 முதல் தமிழ்நாடு அரசு மேலவை உறுப்பினராக ஆசிரியர் தொகுதியில் 12 ஆண்டுகள் தொண்டாற்றினார்.

ஆசிரியர் இனக் காவலராகத் திகழும் இவர் தன்னைச் சார்ந்த ஆசிரியர்களை, ஒழுக்கத்தோடு ஆசிரியப்பணி ஆற்ற வழிகாட்டுகிறார். நெஞ்சுரத்தோடு நிமிர்ந்து நிற்கும் பண்பையும் சுய மரியாதையுடனும் பகுத்தறிவுடன் கூடிய வாழ்க்கை வாழவும் , அதிகார வர்க்கம் நடத்திடும் அநியாயங்களை தட்டிக் கேட்கவும் "கடமையைச் செய்து உரிமையைக் கேட்கும் துணிச்சலையும் வளர்க்கிறார்"
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது 
-- என்னும் குறளுக்கு இலக்கணமாகத் திகழ்பவர்.


செ. முத்துசாமி அரங்கம், 3/28, பிளாக்கர்ஸ் சாலை, சென்னை - 2. Phone: 044-28411577, 28411888 Mobile: 94441 76288 
6, கண்டர்பள்ளி சாலை, நாமக்கல்,தமிழ்நாடு - 
637001, Phone: 04286-230160; Fax: 04286-225860
Web Site: http://www.fightingwarriorsemu.com  eMail: vsmuthusamy@yahoo.comtamilnaduteachersfederation@gmail.com