Wednesday 24 June 2020

செ.மு வின் பாதையில் ஆசிரியர் கூட்டணியும் நானும் இ.ம.வேலுசாமி

எழுபதில்  மதுரையில் நடைபெற்ற இயக்க நிறுவன ர் ராமுண்ணியின் மணிவிழா மாநாட்டுக்கு சிங்காநல்லூர் நகர செயலாளர்., ஆசிரியர் பேரணிக்கு  அணிதிரட்டியவன்    .. 71ல் மாவட்ட பொருளாளர், 72ல் திருப்பூரில் கோவை மாவட்ட மாநாடு பொதுச் செயலாளர் பதவி ஏற்று மாநாட்டு வெற்றிக்கு உழைத்தார். 
 அன்றைய அமைச்சர் அண்ணன் சாதிக் பங்கேற்றார் .
72 ஆம் ஆண்டு எழுச்சிமிக்க சிறைப் போராட்டம் கோவை மாவட்ட போராட்டக்குழு ஐவரில் ஒருவராக பணியாற்றினேன் ,  73ல் கோவை வெள்ளி விழா மாநாடு மாநாட்டு மலர் பணியில் அடியேனுக்கு பொதுச்செயலாளர் பாராட்டு
 78 முதல் 84 வரை தலைமை நிலைய செயலாளர்.
 84 ல்துணை பொதுச்செயலாளர்.
 87 ல் மற்றும் 93 ல் நடைபெற்ற மாநில தேர்தலில் மாநில பொருளாளராக* பொறுப்பேற்று ,இதை அடுத்து வந்த பொறுப்பு மாநில தலைவர்

 இயக்கத்தில் பொன்விழா மாநாட்டுத் தலைவர். என படிப்படியாக பொறுப்புகள். துளித்துளியாக விழுந்த மழை நீர் சேர்த்து தூர் எடுத்து குளத்தில் நிரம்பியது போல், உழைப்பு_ உழைப்பு_ உழைப்பு எனும் ஓய்வற்ற பணிகளி ன்  தொடர் நிகழ்ச்சியாகவே பணியாற்றினேன்

 சென்னையில் அலுவலகம் இல்லாமல் சில காலம், சில நேரம் ,சட்டமன்ற பழைய விடுதி ,திண்ணையிலும் படுத்து, எழுந்து ரயில் இருந்தும், கட்டணத்திற்கான நிதி வசதி இல்லாமல் லாரிகளில் பயணம் செய்தும் அவ்வளவு ஏன், செயற்குழு உறுப்பினர்களின் பயணப்படி மட்டுமே இயக்க நிதியாக வைத்துக்கொண்டு அறுபது, எழுபதுகளில் சங்கம் கட்டி வளர்த்து, போராட்டம் நடத்தி சலுகைகளை பெற்றுத் தந்தது ,என்பது சாதாரணம்அல்ல 
.
 மாநில அலுவலகம் இல்லாத இடைப்பட்ட இரண்டு ஆண்டு காலம் இயக்க வழக்குக்காக, சென்னை வந்து செல்லவே எனது மருத்துவ விடுப்பு அவ்வளவு  தீர்ந்த்து. இந்த இயக்கத்திற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்க தயங்குகின்ற காலகட்டத்தை எண்ணி வியப்பும் வேதனையும் அல்லவா தோன்றுகிறது. இயக்க வழக்குக்காக சென்னை வந்து தங்க இடமின்றி, சட்டமன்ற பழைய விடுதி மொட்டை மாடியில் ,படுத்து உறங்கி பறவைகள் ஒலி கேட்டு எழுந்து, யாருடைய அறையில் சென்றாவது குளிக்க முடியாதா ,என்ற ஏக்கத்தோடு அலைந்து, முகம் கைகால் கழுவி, வழக்கறிஞர் வீட்டுக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்து, அலைந்து இரவு பயணங்கள் மேற்கொண்டதெல்லாம்  அதாவது  வசதியின்மை, பயணம் அலைச்சல் ,பயண செலவு ,விடுப்பு இழப்பு இவை ,எதுவுமே கணக்கில் கொள்ளாமல் நான் உழைத்ததற்கு அடிப்படையே  நமது பொதுச் செயலாளர் செ.மு அவர்களிடம்  பெற்ற பயிற்சிதான்இதே  வள்ளுவர் கோட்டத்தில் தான் இயக்கத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என ஐயன் கலைஞர் அறிவித்த பெருமை உண்டு. அன்றைய வாக்குறுதியை நிறைவேற்றி அங்கீகாரம் அளித்த போது  அடியேனே மாநில தலைவர். 1989 இல் இதே வள்ளுவர் கோட்டத்தில் மாநாடு. அதில் நான் தான் வரவேற்பாளர். மாநில பொருளாளராக அளித்த ஊதியத்தை ஒரு அறுவடை என்றும், அகவிலைப்படி ஒரு  அறுவடை என்றும் குறிப்பிட்டுக் கூறி வரவேற்றபோது,, கலைஞர் அவர்கள் தம்பி  வேலுச்சாமி அறுவடை ,அறுவடை என்று குறிப்பிட்டு கூறினார். அறுவடைக்கு பின் களத்துக்கு வரவேண்டும் தூற்றலும் உண்டு என இரு பொருள்பட கலைஞர் அவர்கள் கூறியது. இன்றும் கூட காதுகளில் இனிக்க இனிக்க எதிரொலிக்கிறது.

 1967இல் நமது செ.மு சேலம் மாவட்ட செயலாளராக இருந்தார். நேர்முக உதவியாளராகவோ,  பொதுச்செயலாளராகவோ பதவிக்கு வராத  நேரம், சேலம் மாவட்ட மாநாட்டை முடித்துவிட்டு, ஆங்கில பயிற்சி பெற கோவைக்கு வந்து இருந்தார் .பயிற்சி வகுப்பு முடிந்ததோ இல்லையோ பள்ளி,பள்ளியாக  சென்று ஆசிரியர்களிடமும் ஆசிரியர் சங்க கூட்டங்களிலும் , ஆசிரியர் கூட்டணி பற்றியும் எல்லா ஆசிரியர்களிடமும் ஒரே ஆசிரியர் இயக்கத்தில் இருக்க வேண்டிய அவசியம் பற்றியும் , பேசி ,சேலம் மாநாட்டு மலரை அவர்களிடம் வழங்கிவிட்டு தான் வருவார். ஆசிரியர்கள் மத்தியில் ஐக்கிய சங்கம் போன்ற பிரிவுகள் அன்று கோவையில் இருந்ததை அவரது ஆங்கிலப் பயிற்சி வகுப்புகள் முடிக்கின்ற காலத்துக்குள் மாற்றி ஒரே அமைப்பின் கீழ் கொண்டுவந்தார்.

இவரோ, சேலம் மாவட்ட செயலாளர்.  பயிற்சிக்கு வந்து இருப்பது  கோவை மாவட்டம்.   வெளி மாவட்டத்துக்கு செயலாளர் ஆயிற்றே  கோவை மாவட்டத்தில் வந்து ஆசிரியர்களிடம்  கூட்டம் போட்டு பேச வேண்டுமோ என்றெல்லாம் கருதாமல் பல்வேறு பெயர்களில் பிளவு பட்டிருந்த ஆசிரியர்களை ஒன்றாக்கும் முயற்சியே தேவை என்று சங்க வளர்ச்சி பற்றி மட்டுமே சிந்தித்து செயல் பட்டவர்செ.மு  என்றால் இது பிறவிலேயே தலைமை ஏற்கும் பக்குவத்தை பெற்று உருவான தலைமை என்று தானே பொருள்

 1977 செப்டம்பர் 5 இல் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற பெயரில் சென்னையில் சங்கத்தைப் பதிவு செய்ய சங்கம் இட்ட கட்டளையை ஏற்று தனிமனிதனாக சென்னை சென்று முதல் மாநில தலைவர் என்ற பொறுப்பில் சங்கத்தைப் பதிவு செய்து பதிவு எண் 197 /77 பெ ற்றேன்.    1977 செப்டம்பர் ஐந்து ஆசிரியர் தினத்தன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற பெயரை பதிவு செய்த போதே மாநில தலைவராக பொறுப்பேற்று பதிவு செய்த இளையவன் நான். பதிவுகளின்படி 1977இல் மாநில தலைவர் ஆனாலும் சட்டப்படி 1994இல் மாநில தலைவராய் போற்றுதற்குரிய பொதுக்குழு வால் தேர்ந்தெடுக்கப்பட்டேன்

இ. ம. வேலுச்சாமி முன்னாள் மாநிலத் தலைவர்
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்

உள்ளத்தாலும் பொய்யாத உத்தமர்அய்யா செ.மு* _மதுரை கோ. ராமசாமி

தமிழகத்தில் பல ஆசிரியர் இயக்கங்கள் இருப்பினும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்ற இயக்கத்திற்கு ஒரு தனித்தன்மையும்,  தரமும் என்றும் உண்டு.  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ஐயாசெ.மு  அவர்கள் பொதுச் செயலாளராக இருந்த காலத்திலும், இயக்கம் தோன்றுவதற்கு முன்பும் ,பல அரிய செயல்களை எல்லாம் அவர்  நடத்திய மாநாட்டு தீர்மானங்கள் அவரின் அறிவாற்றலையும் அன்றைய , இன்றைய இயக்க   முதுபெரும் உறுப்பினர்களுக்கு மிகவும் நன்றாக தெரியும்..  சட்ட மேலவை உறுப்பினராக இருந்த காலத்தில் எண்ணிலடங்காத நன்மைகளை பெற செய்தார் அந்த பேரறிவு படைத்த பெருமகன் அவர்கள்.

நான் இந்த இயக்கத்தின் நிறுவனர் மாஸ்டர்இரா.முண்ணி காலத்தில். இருந்து உறுப்பினராக இருந்து வருகிறேன் பல ஆசிரிய மாநாடுகளில் கலந்து கொண்டவன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் திருமிகு செ.மு  அவர்கள் சொல் வேறு, செயல் வேறு அறியாதவர் . தன்னலமற்ற வெறுப்பும் சலிப்பும் இன்றி ஆசிரியர்களுக்கு உழைத்துக் கொண்டிருப்பவர் 

 மத்திய மாநில அமைச்சர்களின் மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரியவர்.கறைபடாத கரங்களுக்கு என்றும் உரியவர்  கள்ளமும், கபடமற்றவர் , என்றும் எங்கும், வேற்றுமை பாராட்டாதவர் ,  இயக்க வரலாற்றை செம்மையாகவும், சிறப்பாகவும், நேர்மையாகவும் எடுத்துரைப்பவர்* எழுதி நூல் வடிவில் கொண்டு வந்தவர்.  மேலும் கொண்டு வருபவர்.*அழுக்காறு
,வெகுளி அற்றவர்* .சீரிய சிந்தனையாளர்**

ஒப்பற்ற இந்த ஆசிரியர் பேரொளியை போற்றுகிறேன். பின்பற்றுகிறேன், தமிழக ஆசிரியர் பெருமக்கள் செய்த பெருந்தவத்தால் கிடைத்த இந்த பேரறிஞனைப் , போற்றி நாளும் புகழ்கிறேன்

 என்னை போன்ற வயதில், அவரை அறிந்தவர்களுக்கும், இன்று இருக்கும் உறுப்பினர்களுக்கும், நாளை இந்த இயக்கத்திற்கு வருபவர்களுக்கும்
இந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இயக்கத்தில் சேர்ந்து ஆசிரியர் இனம் என்றும் வாழ வேண்டும், வளம் பெற வேண்டும். வையகத்தில் மாற்றமும் மறுமலர்ச்சியும் ஏற்படுத்த வேண்டும்.

 உள்ளத்தாலும் பொய்யாத உத்தமரை என் வாழ்நாளில் கண்டு நீங்காத , தொடர்பு கொண்டிருப்பது  நான் பெற்ற பேறு

தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்

வரலாற்று நாயகன் செ.மு._கு.அருள்சாமி. சிவகங்கை

நேற்றைய நிகழ்ச்சிகள்
இன்றைய வரலாறு.
இன்றைய நிகழ்ச்சிகள்
நாளைய வரலாறு.
நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்காரராகிய
 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
மாநில பொதுச் செயலர்
செ.முத்துசாமிExMLC
அவர்கள் ஒரு
வரலாற்று நாயகன்.
இயக்க வரலாற்றில்
இவர் ஒரு சகாப்தம்.
சுமார் முப்பத்து இரண்டு ஆண்டுகள்.
இயக்கத்தின் பொதுச்
செயலாளராகவே
தொடர்ந்து தம் இயக்கப்
பணியை சிறப்பாக
ஆற்றிவரும் இவரைப்
போல்வேறு யார் உளர்?
டாக்டர் அம்பேத்கார்.
"நான் என் மக்களுக்காக உறங்காமல் விழித்திருக்கிறேன்"
என்று கூறியது போல
ஆசிரியர் பேரினத்திற்காக என்றும் *விழித்திருந்து
போராடும் *மாவீரன் *
அல்லவா?.இவர் பெற்ற
இன்னல்கள் எத்தனை!
எத்தனை!! அவற்றை நாம் அவர் வாயால்
கேட்டு வியந்து பலமுறை புத்துணர்வு
பெற்று பணியாற்றினோம்.
பணியாற்றி கொண்டிருக்கிறோம்.
"*அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
என்ற பாரதியாரின்.
வரிகளுக்கு ஏற்ப இயக்க வரலாற்றில்
அச்சம் தவிர்த்து வாழும்
நாயகன் அல்லவா நம்
பொதுச்செயலர் செ.மு.மாஸ்டர் இராமுண்ணிக்குப் பின்பு இயக்கத்தின்
பொதுச்செயலாளராக
பொறுப்பேற்றுக் கொண்டு இயக்கத்தை
துணிச்சலுடன்.
வளர்த்து மிகச்சிறப்பாக
செயல்பட்ட போதிலும்
சிலரது*பதவிஆசையால்  இயக்கம் பல முறை
பிளவு பட்ட போதிலும்
அஞ்சாது சோர்விலாது
துணிவுடன் செயலாற்றி
ஊழையும் தோல்வி
அடையச் செய்து வெற்றிகளைக் குவித்துள்ளார்.
(நாளையும் தொடரும்)
எழுதியவர்:-
கு.அருள்சாமி.
சிவகங்கை மாவட்டச்
செயலாளர்.15-வது மாநில மாநாடு சிறப்பு
மலரிலிருந்து...
தகவல்:-
செ.வடிவேலு.

தென்மண்டல மாநாடுசெ.மு.வுக்கு* ஒரு திருப்பு முனை._ஏ.சாமுவேல் வேதமாணிக்கம்.

மதுரையில் தென் மண்டல மாநாடு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருப்பு
முனை மாநாடு *மதுரை மேயர் முத்து*வரவேற்பு குழுத் தலைவராக பொறுப்பு ஏற்று செயல்பட்ட மாநாடு.அன்றைய மாநாட்டுச் செயலாளர் திரு.என்.இராமன். பெரியவர் வெள்ளைச்சாமி அவர்கள் மாநாட்டுப் பொருளர்.நான் மாநாட்டுச் செயலாளரின் நேர்முக உதவியாளராக செயல் பட்ட மாநாடு.

செ.முத்துசாமி தென் பகுதிக்கு வந்து *திரும்ப முடியுமா?,முதுகுத் தோலை உரித்து விடுவேன் என சூளுரைத்தவர் இருக்கும் இடத்தில் நடைபெற்ற மாநாடு.

கிராமப்புற ஆசிரியர் களுக்கு *கிராம ஈட்டுப் படிவேண்டும் என கோரிக்கை வைத்த மாநாடு மட்டுமல்ல,ஈட்டுப்  படி ரூ 10/-*என பெற்றுத்தந்த மாநாடு. அதன் பெருமைக்குரியவர் சமீபத்தில் காலமான வருவாய்த் துறை அமைச்சர் மாண்புமிகு நா கி.மனோகரன்.அவர்கள்.மாநாட்டில் அவர் நிதி அமைச்சர் என்ற
முறையில் கலந்து கொண்டு பேருரையாற்றினார்.  நமது பொதுச்செயலாளர் செயல்வீரர் செ.மு. அவர்களின் செயல்திறனையும், அணுகுமுறையையும் மாண்புமிகு நாஞ்சிலார் அவர்கள் வெகுவாக  பாராட்டிப் பேசினார்.
கிராம ஈட்டுப்படியின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட அமைச்சர் தொகையை முறைப்படி அறிவிப்பதாகக் கூறினார்.அதன் பலனை இன்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புற ஆசிரியர்களும் அனுபவித்து வருகிறோம்.இதற்கு காரண கருவியாக பயன்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியையும்,மதுரையில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டையும், நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி. அவர் களையும் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். 

*இது ஓர் வரலாறு*. செ.முத்துசாமி.தென் பகுதிக்கு வந்து திரும்ப முடியுமா?என்றவரைத்தான் அன்று காணவில்லை. அரசடி இரயில்வே மைதானத்திலிருந்து அன்றைய மாவட்டத்தலைவர் திரு. மு.சேவகபாண்டியன்.தலைமையில் புறப்பட்டஆசிரியர் பேரணிகல்பாலம் வழியாக மாநாடு நடைபெற்ற தமுக்கம் அரங்கம் நோக்கி சென்ற காட்சி கண்கொள்ளாக் காட்சி. மாநாட்டுப் பொருளாளரும்,மாவட்டச் செயலாளருமான  பெரியவர் வெள்ளைச்சாமியும். நானும் ஆல்பர்ட் விக்டர் பாலம் என்ற பெரிய பாலத்திலிருந்து ஊர்வலத்தைபார்த்தோம்.

மதுரையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தின் போது கல்பாலம் இருக்கும் வைகை ஆற்றில் கள்ளழகர். இறங்கும் போது பெரும் திரளான மக்கள் கூட்டம் கூடும்.அதற்கு ஒப்பான கூட்டம் போல் ஊர்வலம்சென்றதை இன்னும் மறக்க முடியவில்லை.

ஏனெனில் பொது வாழ்க்கையில் மிக இக் கட்டான நேரத்தில் நடை பெற்ற மாநாடு.இயக்க வரலாற்றில்*பெருமை சேர்த்த மாநாடு*  மாநாட்டில் பேருரை
ஆற்றிய நமது பொதுசெயலாளர் செ.மு.வின் உரையை கேட்டுக் கொண்டிருந்த ஓர் கல்லூரி ஆசிரியர் கூறினார் உங்களுக்கு எப்படியோ! எங்களுக்கு செ.மு. Fighting.M.L.C.  என்று கூறினார்.
அன்பார்ந்த ஆசிரிய சகோதர,சகோதரியர்களே,அன்பர்களே,நண்பர் களே! *தென்மண்டல மாநாட்டின்*நிகழ்ச்சிகளை நினைவு கூறவும் முக்கிய நிகழ்வுகளை இம்மலரில்எழுதவும், வாய்ப்பளித்த மலர் குழுவினருக்கு அன்பார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!வணக்கம்!!
எழுதியவர்:-
ஏ.சாமுவேல் வேதமாணிக்கம்.
மாவட்டத்தலைவர்
மதுரை மாவட்டம்.
தகவல்:-
செ.வடிவேலு.
(15-வது மாநில  மாநாடு
சிறப்பு மலரிலிருந்து.) 

செ.மு.சாதித்தவைகள்எத்தனையோ?*_ஆர்.அருள்ராஜ்.

தோன்றில் புகழோடு தோன்றுக"என்றார் அய்யன் வள்ளுவன்.
இப்புவியில் எல்லாருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது.சிலருக்குத்தான் கிடைக்கும்.அந்தப்பட்டி யலில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி.யும் ஒருவர் ஆவார். சேலம் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் மரூர்பட்டி. என்ற ஊரில் பிறந்தவர் ஒரு கிராமத்தில் துவக்கப்பள்ளியில் இடைநிலை தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். 
ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டச் செயலாளராக.பணியாற்றினார்.பின்னர் ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகர் *மாஸ்டர் இராமுண்ணியால் அடையாளம் காட்டப்பட்டு மாநிலப்பொதுச்செயலாளராக.பணி ஏற்றார்.அன்று முதல் இன்றுவரை ஆசிரியர்களுக்காக ஓயாத பணியை எந்த பிரதிபலனும் எதிர்பாராது.தொய்வின்றி செய்து வருகிறார் இரு முறை தமிழ்நாடு சட்டமன்றமேலவை உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டு பல சாதனைகளை ஆசிரியர்களுக்கு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவியாசிரியையாகப் பணி செய்து வந்தவர் திருமதி.ஜெயச்செல்வி என்பவர்.இவரது கணவர்*சென்னையில் அரசு பேருந்தில் நடத்துனராக பணிசெய்து வருபவர். இவருவரும் மாறுதலுக்காக பலமுறை முயன்றும் மாறுதல் கிடைக்கவில்லை.நமது பொதுச்செயலாளர்
செ.முத்துசாமி அவர் களிடம் அவர்களது நிலையை சொன்ன பின்பு அவர்களுக்காக முயற்சி செய்து உதவி ஆசிரியை திருமதி.ஜெயச்செல்வி அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு ,மாறுதல்.வாங்கிக் கொடுத்து பிரிந்து வாடிய கணவன் மனைவி ஒரே இடத்தில் பணிபுரிய மாறுதல்*வாங்கிக் கொடுத்தவர்.இப்போது அந்த தம்பதியருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து ஒரு மாதந்தான் ஆகிறது.இது பெரும் மகிழ்ச்சிக்குரிய. செய்தியாகும். 

ஒட்டபிடாரம் ஒன்றியம் தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர கைத்தொழில்.(P.V.T) ஆசிரியையாக பணி செய்பவர்*திருமதி.கு. கனகலட்சுமி*என்பவர் முழுநேர ஆசிரியராக அரசு தேர்வு நடத்தியதில் தேர்ச்சி பெறவில்லை.தொடர்ந்து பகுதி நேர ஆசியராகவே பணி செய்து வந்தார் .பின் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி.மூலம் அரசுக்கு விண்ணப்பம் கொடுத்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.தற்போது முழு நேர கைத்தொழில் ஆசிரியையாகஇடைநிலை ஆசிரியர் ஊதியம் பெற்று வருகிறார்.இந்த ஆசிரியையின் வாழ்க்கைக்கு முழுதீபம் ஏற்றியவர் *நம் பொதுச்செயலாளர் செ.மு.*தான்.

இன்னும் எத்தனையோ செய்திகளைச் சொல்லலாம்.தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு செ.மு.செய்த சேவை ஏராளம் இன்னும் செய்ய காத்துக்கொண்டு இருப்பவர்.எனவே அவர் கள் பல்லாண்டு வாழவும்.இன்னும்
அவர்கள் சேவை வளரவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்.
தூத்துக்குடி மாவட்ட
தலைவர்.
15-வது மாநில மாநாட்டு
சிறப்பு மலரிலிருந்து
நாள்-13-08-2000.
தகவல்:-
செ.வடிவேலு.

தூயதொண்டர் செ.மு வழிநடப்போம் எழுதியவர்:- ப.ஆல்பர்ட் இலால்குடி*

ஆற்றல் மிக்க ஆசிரியர்  பேரினம் அடிமைப்பட்டு ஒடுங்கி போனகாலத்தே ஆர்த்தெழுந்து ஒன்று படுவோம்,போராடுவோம் என போர்ப்படை அமைத்தார் ஆசிரியர் அமைப்பை உருவாக்கிய *மாஸ்டர் இராமுண்ணி*அவரால் கண்டெடுக்கப்பட்ட நல் முத்தே நமது செயல் வீரர் செ.முத்துசாமி.

"பொதுநலத் தொண்டர் நன்றியை எதிர்பார்க்கக் கூடாது. நன்றி செலுத்துவது பயன் பெறுபவர் கடமை" "பொதுவாழ்வில் ஈடுபடுபவர் மானம் அவமானம் பார்க்கக்கூடாது"என்பது தந்தை பெரியார். பொன்மொழி. 

பொதுவாழ்வில் ஈடுபட்டு அன்றும்,இன்றும் நன்றியை எதிர்பாராது எதிர்பார்ப்போடு இயக்கத்திற்கு வந்தோரின்  ஏச்சிகற்கும் பேச்சிற்கும் செவிசாய்க்காது எத்தனை பேர் சுய நலத்திற்காக தனி இயக்கம் கண்டாலும், கருமமே கண்ணாக,
கறைபடாத கையாக
எளிமையே உருவாக
,கனிவான வாதத்தால் களம்பல கண்டு,
சிறை பல ஏகி
கல்வித்துறையினரால்கவரப்பட்ட,
கண்ணியமிக்கபார்லிமென்டேரியனாக
சாதனைகளை
முத்திரையாகப் பதித்து
ஆட்சியாளர் பலராலும்
ஆசிரியர் தொண்டர் முத்துசாமி என பாராட்டப் பெற்று 
எல்லா ஆசிரியர் இயக்க தலைவர்களுக்கும்  தலைமையாக 
ஏற்றமிகு வீறுநடை கொண்டு இன்று வரை 27 ஆண்டுகாலம் 
இயக்க பொதுச்செயலாளராகப்
பணியாற்றும் எம் தலைவர் செ.முவை
பின் பற்றியதால் வரலாற்றில் முத்திரைகள் பதிக்கப்பட்டன.


1972-ல் சிறைப் போராட்டத்தில் சிறை சென்ற இலால்குடி வட்டாரத் தலைவர் இராமையா அவர்கள் சிறைக் கொடுமையால் உடல்நிலை பாதித்து சில மாதத்தில் காலமானார். வட்டாரத்தின் சார்பில் நிதியளிப்பு நிகழ்ச்சி மாநிலப் பொறுப்பாளர் களை அழைத்து அன்றைய அமைச்சர் மாண்புமிகு*அன்பில் தர்மலிங்கத்தின் மூலம் அந்த சமயத்தில் இறந்தஎட்டு ஆசிரியர்கள் குடும்பத்திற்கும் நிதி வழங்கினோம்.அந்த நிகழ்ச்சியில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு  அரசாங்கத்தின் மூலம் நிதி அளிக்க வேண்டுமென*பொதுச் செயலாளர்*முத்துசாமி வேண்டுகோள். விடுத்தார் அதை ஏற்று மாண்புமிகு அமைச்சர் அன்பில் தர்மலிங்கம்.முயற்சியால் தான் அன்று இறந்தவர்கள் அனைவருக்கும் ரூ60000/- வீதம் கிடைத்தது."*ஆளும் கட்சிக்கு அடிபணிய மாட்டோம்*,எதிர்கட்சிக்கு எடுபிடி ஆகமாட்டோம்"என்ற தாரகமந்திரத்தை கடைபிடித்து இயக்கத்தை கட்டி காத்து வருகிறார் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி

திருவரங்கத்தில் நடந்த பொதுக்குழுவில் மதிய உணவுப் போராட்டத்தை முன் எடுத்த நமது பொதுச் செயலாளருக்கு  லால்குடி வட்டாரம் முன் குரல் கொடுத்து வரவேற்று,அன்று போராட்டத்தை வேண்டாம் என்ற இன்றைய வேறு இயக்கத் தலைவருக்கு பதிலடி கொடுத்தது. நமது பொதுச்செயலாளருக்கு கிடைத்த பொறுப்பை மிகச்சரியாக காலமறிந்து,இடமறிந்து கடுமையாக பணியாற்றியதால் பொதுச்செயலாளர் பதவி தேடிவந்தது,அவரால் பதவிக்கு மதிப்பும் மரியாதையும் கி டைத்தது.செ.மு வழிநடப்போம்*
*வாழ்க செயல் வீரர் செ.முத்துசாமி*
எழுதியவர்:-
ப.ஆல்பர்ட் இலால்குடி*
தகவல்:-
செ.வடிவேலு.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.

Friday 19 June 2020

ஆசிரியர் நலம் காத்தவர் செ.மு_ஆ.சின்னப்பன் நகரச் செயலாளர் மேட்டுப்பாளையம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரத்தில்1969ம் ஆண்டு ஏப்ரல் மாதம்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நகரக்கிளை பொதுக்குழு கூட்டம் சி.எஸ்.ஐ நடுநிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.கூட்டத்திற்கு பொதுச்செயலாளர்செ.முத்துசாமி.அவர்கள்வருகை ருகிறார்கள்.இயக்கம்ஒரே அணியில் இருந்தகாலம்.அன்றைய நகரக்கிளை செயலாளர் நானே.கூட்டமுடிவில்செ.முத்துசாமி அவர்கள் இயக்க வளர்ச்சிக்கு நிதி திரட்டுகிறார்கள்.அனைவரும்உள்ளதைஅன்புடன் கொடுக்கின்றனர்.அப்பொழுது ஒரு பெண் ஆசிரியை தன் கையில் நிதியில்லை*வளர்ச்சி நிதிக்காக தன்கைக்கடிகாரத்தை கழற்றிப் செ.மு அவர்களிடம் கொடுக்கிறார்கள். அவரது துணிச்சலானசெயலைப் பாராட்டி கடிகாரத்தை திரும்பிக்கொடுக்கிறார் செ.முஎந்த அளவில் *பற்றும்பாசமும்*ஆசிரியர்கள்செ.மு மீது வைத்திருந்தனர் என்பதை இந்நிகழ்ச்சிஎடுத்துக் காட்டியது.அப் பெண் ஆசிரியைதிருமதி. வி.பரிமளகாந்தம் என்பவராவார்.மற்றெரு சமயம் ஆசிரியர் சங்க விழாவில் பள்ளித்துணை ஆய்வாளர் தமிழ்நாட்டின் கல்வித் துறை செயலாளர் யார்என்று ஒரு கேள்வியைகேட்கிறார்.உடனே ஒருஆசிரியர் எழுந்து திரு.செ.முத்துசாமி என்றுகூறுகிறார் .எந்த அளவில் நமது செ.மு அவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று இருந்தார் என்பதற்கு இதுவும் ஒருசான்றாகும்.

            ஆசிரியர்கள் விழிப்புணர்வு இல்லாமல் கல்வித்துறையின் கீழ் இயந்திரம் போல் செயல்பட்ட காலம்.நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் .அவர் தம் கடமைகளை செய்து உரிமைகளைப் பெற, உரிமைக் குரல் கொடுத்து,சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கச் செய்ததின்  மூலம் தமிழ்நாட்டு தொடக்க,உயர் தொடக்க,உயர்நிலைப் பள்ளி ஆசிரியரகளின்
நன் மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்றவர்  செ.மு.தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணிபாதுகாப்பிற்காக செ.மு அயராது உழைத்து பல வெற்றிக்களைக் கண்டார்.மேட்டுப்பாளையம் மகாஜன தனியார் பள்ளி நிர்வாகம் ஆர்.டி.கிருஷ்ணசாமி என்ற ஆசிரியரை தக்க காரணம் ஏதுமின்றி நிரந்தரப் பணிநீக்கம் செய்தது மூன்றாண்டு காலமாக சம்பளமே இல்லாமல் தனித்துப் போராடி வந்த அவர்,தம் பிரச்சனையை மேட்டுப்பாளையம் நகரக் கிளை மூலம் நமது பொதுச்செயலர் செ.முத்துசாமி அவர்களிடம் ஒப்படைத்து நீதி கிடைக்கவும்,தனியார் பள்ளி பணிப்பாதுகாப்பு கிடைக்கவும் கோரிக்கையாக வைத்தார்.


1975 ஆம் ஆண்டு மே மாதம் நமது பொதுச்செயலர்செ.மு அவர்கள் மேட்டுப்பாளையம் நகரத்தில் சுமார்  22 நாட்கள் முகாமிட்டு மேற்படி ஆசிரியரின் பிரச்சினைக்குத் தீர்வு காண உண்ணாவிரதம்,தெருத்தெருவாக  ஊர்வலம்,நிர்வாகிகள் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம்,போன்ற அறப்போராட்டத்தை நடத்தச் செய்தார்.போராட்ட இறுதியில் மகாஜன நிர்வாகத்தில் இருந்த காட்டூர் பள்ளியை 01-06-1975 முதல் நகராட்சி நிர்வாகம் ஈர்ப்பு செய்ய அரசு உத்தரவிட்டது  பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் ஆர்.டி.கிருஷ்ணசாமி அவர்களுக்கு அதே பள்ளியில் மூன்றாண்டுகளுக்குப் பிறகு 01-06-1976ல்  வேலைகிடைத்தது இது ஒரு மாபெரும் வரலாற்று சாதனை  அல்லவா? இவரது முயற்சியையும், திறமையையும், சர்வ கட்சியினரும் அனைத்து தொழிற்சங்கங்களும், பொதுமக்களும்,ஆசிரியர்களும் வெகுவாக பாராட்டிப் புகழ்ந்தனர். 

 இத்தகைய சிறப்பு வாய்ந்த நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி அவர்கள்1968முதல் இன்று வரை 25 ஆண்டுகளுக்கு மேல் *தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணியின் *பொதுச் செயலாளராகத் தொடர்ந்து பணியாற்றியதை சிறப்பிக்கும் வகையில் வெள்ளிவிழா 07-10-95ல் ஆசிரியர் பேரினம் கொண்டாடுகிறது.இந்த நல்ல நாளில் செ.மு. என அன்பாக அழைக்கப்படும் நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமி.அவர்கள் நற்சுகத்துடன். நீண்டநாள் வாழ்ந்து ஆசிரியர்களுக்காகத் தொடர்ந்து பணியாற்ற அருள வேண்டும் என்று
இறைவனை வேண்டுகிறேன்,நல்வாழ்த்துக்களையும் நன்றியையும் காணிக்கையாக்குகிறேன். 

எழுதியவர்:-
ஆ.சின்னப்பன்
நகரச் செயலாளர்
மேட்டுப்பாளையம்.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-
செ.வடிவேலு.

Thursday 18 June 2020

வரலாற்று நாயகன் செ.மு_வி.வரதராசன்எம்ஏ எம்எட்* .மேனாள் திருப்பூர் மாவட்டச் செயலர்

இதனை இதனால் இவன் முடிக்குமென்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல் என்பது வள்ளுவர் வாக்கு அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஆரம்ப ஆசிரியருக்கு என உரிமைக்குரல் கொடுக்கத் தனி இயக்கம் கண்டவர் இராமுண்ணி.பெரியவர்.தொடக்ககப் பள்ளி ஆசிரியர்களின் உரிமையை நிலை நாட்ட வீறு கொண்டு எழுந்து இயக்கம் கண்ட அப்பெரியவர் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கத்தை வழிநடத்தி சென்றார்.

கொல்லிமலை.பகுதியில் இயக்கத்தை வளர்த்து சேலம் மாவட்டத்தில் இயக்கத்தை நிலைநிறுத்தி *சேலம் மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று,மாவட்ட மாநாட்டை மாநில மாநாடு போல நடத்திக் காட்டியசெம்மல் செ.முஅவர்களை தமிழ்நாட்டு ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பக்கத்தில் வைத்துப்பயிற்சி கொடுத்தார் இயக்கத் தந்தை.செ.முத்துசாமிஅவர்களின் வெற்றிப்பயணம் தொடங்கிய நாள்*1968டிசம்பர்29 ஆம் ! இவர் பொதுச் செயலாளராகப்பொறுப்பேற்ற நாள் தான் அது.இதன் பின் பட்டிதொட்டியெல்லாம் இயக்கத்தைக் காலூன்றச் செய்தார்.

நன்னீர் பாயும் நன்செய் நிலத்தில் வேளாண்மைப் பணி செய்வது எளிதானது.
ஆனால் கல்லும் முள்ளும் நிறைந்த நிலத்தில் நீர்வளம் குறைந்த மண்ணில் விளைச்சல் காண பெருமுயற்சியும் கடும் உழைப்பும் தேவை என்பதை நாம் அறிவோம். செ.முத்துசாமி. பொதுச்செயலாளராகப்பொறுப்பேற்ற சமயம் ஆசிரியர்களின் நிலை பரிதாபத்துக்கு உரியதாக இருந்தது. பொருளாதார ரீதியில் ஆசிரியர்கள் பட்ட அல்லல் பெரிதாக இருந்தது.அதைவிட அவர்கள் தன்மானமும்கௌரவமும்*.பாதிக்கும் வகையிலும் அவர்கள் மேற்கொண்டிருக்கும் அறப்பணியாம் ஆசிரியப் பணியை கவனிப்பதை விட கல்வியில்லாப்.பிற பணிகளை அவர்கள் செய்ய வேண்டும் என நிர்ப்பந்தங்கள்,காலையில் ஒரு பள்ளிமாலையில் இன்னொரு பள்ளி என்று சொல்லத்தக்க அளவில் மாறுதல் அச்சுறுத்தல்கள்,திடீர்  சஸ்பென்ஷன் உத்திரவு-அதிரடி *பணி நீக்க*ஆணைகள் என சர்வதிகாரம்.தலைவிரித்து ஆடிய நேரம் அது.ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்களின் ஒட்டு மொத்த குரலாக,அநீதியை எதிர்க்கும் அழுத்தமான குரலாக,நீதியின் குரலாக,சமுதாயத் தன்மானம் காக்கும் தரம் மிக்க குரலாக ஆசிரியர்களைத் தட்டி எழுப்பும் உணர்ச்சிக் குரலாகசெ.முத்துசாமி அவர்களின் குரல் ஒலித்ததை நாம் கண்டோம் தக்கவர் இவர் என்று உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் இவரைத் தேர்ந்தெடுத்து அமர வைத்த தமிழ்நாடு சட்ட மேலவையிலும் இவரது குரல் மொத்த ஆசிரியர் சமுதாயத்துக் காதில் ஒலித்தது.
                   அடேயப்பா! எத்தனை எத்தனை பிரச்சனைகளை எடுத்தியம்பி,எப்படிப்பட்ட வாதங்களை முன் வைத்து ஆசிரியர்களுக்காக வாதாடியுள்ளார்!அன்னாரின் சட்ட மேலவைப் பேச்சுக்களைத் தாங்கி வெளிவரவிருக்கும் மலரைப் பாருங்கள்.வியப்பும் பெருமிதமும் தோன்றும்
இவர் ஒரு வழக்கறிஞராக இருந்து இவர் வாதாடிய பிரச்சனைகளை வழக்காகக் கருதி ஆசிரியர்கள் பெற்ற பயனை நல்ல நியாயமான தீர்ப்பாகக்
கருதினால் இவருக்கு நாம் செலுத்தியிருக்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணம் எவ்வளவு வரும் என்று நினைத்துப் பார்த்திருப்போமா? கட்டணம் கொடுத்தோமா? எண்ணிப்பார்ப்போம்.பெற்ற பயனால் நாம்  விடும் நிம்மதிப் பெருமூச்சு- மகிழ்ச்சி புன்னகை இவையே தனக்கு கிடைத்த கட்டணம் என்று  தானே உள நிறைவு கொள்கிறார்.

                 ஏதோ புகழ்ச்சிக்காக எழுத வேண்டும் .விழா வருவதால் எழுதவேண்டிய கடமை என்பதற்காக எழுதப்படுவது அல்ல இது. உண்மையிலேயே,புரிந்து கொண்டு புகழ்ந்து  பேசினாலும்,புரியாமல் புழுதி வாரித்தூற்றினாலும் ஆசிரியச் சமுதாயத்துக்காக உழைப்பதில் பின் வாங்காமல்,ஆற்றலாய்க் கருத்துக்களை எடுத்துச் சொல்லி சமுதாய மேம்பாட்டுக்குப் பாடுபடும் தலைவர்கள் நம் நாட்டில் பலர் இருக்கிறார்கள்.அவர்களில் குறிப்பிடத்தக்க சிறப்பானவர்கள் சிலர் இருக்கலாம்.எனினும் நிச்சயமாக இவர்களில் முதல்வரிசையில் முதல் நபராக விளங்கும் தன்மையை தன் ஆற்றல் மிகு செயலால் கொண்டு இருப்பவர்  செ.முத்துசாமி.என்று சொன்னால் நிச்சயம் புகழ்ச்சி இல்லை.உண்மையிது. 

      நாடு விடுதலை பெற்ற  பின்னர் தமிழ்நாட்டில்  ஐந்து ஊதியக்குழுக்களை
நாம் பார்த்துவிட்டோம்.  இவைகளில் முதல் ஊதியக்குழுவைத் தவிர்த்து மற்ற நான்கு ஊதியக் குழுக்களிலும்  ஆசிரியர்களுக்காக  வாதாடி யுள்ளார்  செ.மு.படிப்படியான முன்னேற்றத்தில் நாம் தற்போது குறிப்பிடத்தக்க நிலை
அடைந்துள்ளோம்.


எழுதியவர்:-
வி.வரதராசன்எம்ஏ எம்எட்*
.மேனாள் திருப்பூர் மாவட்டச் செயலர்
.பொன்விழா
மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-
 செ.வடிவேலு.

சத்தியத்தின்பாதையில் செ.மு*_எம்.அல்போன்ஸா முன்னாள்மாவட்டச் செயலாளர். சிவகங்கை மாவட்டம்.

சத்திய மனிதனின் வாழ்வில் சோதனைகளும் துன்பங்களும் நீக்கமற நிறைந்து நின்றாலும், அவன் ஒரு நாளும் துவண்டு விடுவதில்லை.அவன் கொண்ட இலட்சியத்தில் எதிர்ப்படும் இடையூறுகளையும் தாங்கிக் கொண்டு வாழ்க்கையில் பயணிக்கிறான். என்னைப் பெற்று வளர்த்தவர்களும்,என்னைப் பயிற்று வித்த ஆசான்களும், எனக்கு வழிகாட்டிகளாக  நான் ஏற்றுக்கொண்ட தலைவர்களும் சத்தியம் என்பதையே எனக்கு உயிர் மூச்சாக அளித்து விட்டார்கள் என்பதால் எனது 61 வது வயதிலும் எனக்கென்று நான் அமைத்துக் கொண்ட பாதைகளிலிருந்து இம்மியளவுகூட நான் நெறி பிறழ்ந்தது இல்லையென நெஞ்சுயர்த்திக் கூற முடியும் இந்தக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் தான் நான் சாரவேண்டிய இயக்கமாக*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியைக் கண்டு கொண்டேன். இயக்க நிறுவனர் மாஸ்டர்இராமுண்ணி
அவர்களின் காலத்தில்  *இயக்கம் ஒரு வீச்சைப் பெறவில்லை*1946ஆம் ஆண்டிலேயே இந்தவொரு இயக்கம் தோற்றுவிக்கப்பட்டாலும் வளர்ச்சி என்பது ஆமை வேகமாக இருந்தது.*சொல்லில் வல்லவன்*,சோர்விலான்,செயல்மறவன் தற்போதைய இயக்க வெள்ளிவிழா நாயகன் செ.முத்துசாமி.அவர்கள் பொறுப்பேற்ற பின் தான்,இயக்கம் இயக்கமாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் இதயங்களில் ஊடுருவிய சங்கமாக உருவெடுத்தது.மாநிலம் முழுமைக்கும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் இதயங்களில் இந்த இயக்கம் எவ்வாறு அசுர வேகத்தில் கொலுவேறி யதோ அதே வேகத்தில் உடைவையும் சிதைவையும்  ஏற்றுக் கொள்ள வேண்டிய போட்டியும் பொறாமையும்,சுயநலமும் இயக்கத்தில் இழையோடியது.இயக்கத்தை அரசியல் கண்ணோட்டத்தில் கொண்டு செல்லத் துடித்தார்கள்,பதவி ஆசைகளால் இயக்கத்தைக் கூறுபோடத் துடித்தார்கள்,இயக்கத்தை வைத்துப் *பணம் பண்ணலாம்*என்று கணக்கு போட்டவர்கள் என்பதாகப் பல்வேறு கால கட்டங்களில் தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்த இயக்கத்தை கூறு போட்டார்கள்.இவ்வாறு கூறு போட்ட நிலையிலும் *சோர்ந்து விடாமல்*சோரம் போய் விடாமல் தனக்கென்று அமைத்துக் கொண்ட இலட்சிய வேட்கைகளிலிருந்து சிறிது கூட நெறி பிறழ்ந்து விடாமல் தாக்கு பிடித்தவர் தான்

     இந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் திருமிகு செ.முத்துசாமி.அவர்கள்.பள்ளிப் பணிகளில் நம் சத்தியசித்தாதங்களைப் புகுத்தினால் போதும் என்று பணியாற்றிக் கொண்டிருந்த நான்,காளையார் கோவில் வட்டாரத்தில் ஊடுருவிய இயக்க அலங்கோலங்கள் காரணமாகவும் சத்தியபபாதைகளை மறந்து சர்வ சாஷ்டாங்கமாகப்பரணி பாடும் அவலங்கள் ஊடுருவி நின்றதன் காரணமாக வரும்,ஒரு இயக்கத்திற்குள் நுழைய வேண்டிய நிர்பந்தத்தற்கு ஆளானேன்.திக்கு தெரியாத காட்டில் திசை திருப்பிவிட்டது போல் ஒரு கூட்டம் தவித்து நின்ற போது நான் அவர்களுக்கு தலைமை ஏற்க வேண்டியதாயிற்று. அப்பொழுது நான் சார்வதற்கும் என்னைப்
பின்பற்றி நிற்பவர்கள் சார்ந்து கொள்வதற்கும் நான் கண்டெடுத்த முத்து தான் தானைத் தலைவன் செயல்மறவன்செ.முத்துசாமிஅவர்களைப் பொதுச்செயலாளராக் கொண்ட *தமிழ்நாடு  ஆசிரியர் கூட்டணி* தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் தான் அங்கம் வகிக்க வேண்டுமெனத் தேர்ந்தெடுத்தது ஏன்?பிற இடங்களில்,இயக்கத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்காட்டிய சோமாறி களிடம் என்ன இருந்தது?  கையூட்டு பெறுவது தொழிலாக இருந்தது! இயக்கப் பொறுப்பாளர்களே அலுவலர்களுக்கு இடைத்தரகர்களாக இயங்கும் அவலம் இருந்தது. இயக்கம் என்ற பெயரால் ஆசிரியர்களையே சுரண்டித்தின்னும் அசிங்கம் இருந்தது. இதன் காரணமாக ஆசிரியர்களின் சுயமரியாதை சீரழிந்து மீண்டும் ஒரு அடிமைகள் கூட்டம் இயக்கங்களில் ஊடுருவி நின்றது. இவை எல்லாம் தவிர்த்து நின்ற இயக்கமாக இயக்கத்தை வளர்த்து வந்த கட்டிக்காத்த சத்தியசீலனாக மதிப்புமிகுசெ.முத்துசாமி ExM.L.Cஅவர்கள் என் கண்முன்னே நின்றார்.
                  ஆதலின் அவ்ரில் நானும் என்னைப் பின்பற்றி நின்ற அப்பாவி ஆசிரியர்களும் அவரின் தலைமையின் கீழ் இயங்கிய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் சங்கமித்தோம். நான் இயக்கத்தில் இருந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் தான் ஆறு ஆண்டுகள் காளையார் கோவில் வட்டாரசெயலாளர் ஆறு ஆண்டுகள் சிவகங்கை மாவட்டச் செயலாளர். இந்த பன்னிரெண்டு ஆண்டுகளிலும் எந்தவொரு ஆசாபாசங்களுக்கும் ஆட்பட்டு விடாமல் நான்
அணிந்து கொண்ட கதர் ஆடைகளில் மாசு படாமல் ஆசிரியர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறேன்.

         என்னைச் சார்ந்திருந்தவர்களை சுய சிந்தனை உள்ளவர்களாகப் பழக்கியிருக்கிறேன். அன்பும் நட்பும்,உற்றார் உறவினர் உறவும் இயக்கத்தில் இழையோடச் செய்திருக்கிறேன். ஏனேனில் ஆசானாக இன்றிப் பழகுவதும்,
அந்தப் பழக்கத்தால் அவரிடம் பயிலும் மாணவர்கள் அவ்வாறு உருவாவதும் நிகழ்ந்து விட்டால் சத்தியம் காக்கும் சமுதாய மாற்றம் நிகழ்ந்து விடும்.இது நிகழ்ந்திட ஆண்டுகள் பலவாகலாம்.ஆண்டு கள் பலவாயினும் சமுதாயத்திற்கு எது தேவையோ அந்த சத்தியம் கிடைக்கிறது. என்பதை எண்ணும் போதும்அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை விட வேறு என்ன கிடைக்கிறது?மேற்கண்ட எனது சத்திய சமுதாய மாற்றச் சிந்தனைக்கு வழிகாட்டி யார்? அவர் எனக்கு இளவலாக இருந்தாலும் என் கொள்கைக்கு மூத்தவர் கொள்கை மறவன் செ.முத்துசாமி* அவர்கள் இயக்கப் பணியில் வெள்ளிவிழா க் காணும் அவரின் சித்தாந்தங்களே சத்திய சமுதாயம் கிடைக்க ஒரு வழியாகும். ஆனால் தற்போதைய நிலை என்ன? பதவி வேண்டும் என்று எண்ணிய வர்கள் எல்லாம், இயக்கம் கண்டு விட்ட அவலம். ஊழலுக்கு வித்திடும் உருப்படாத போக்குகள்  கொடுப்பதைக் கொடுத்து பெறுவதைப் பெறுகின்ற கேடுகெட்ட இயக்க சித்தாந்தம்.இயக்கங்களில் மேலோங்கி நிற்கின்றன இடைத்தரகுச் சிந்தனை சுயமரியாதைகளை அடகு வைத்து.நிற்கும் மேம்போக்குக்குப் பார்வை.சுயநலச் சிந்தனைகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும்*சுரண்டல்  சிந்தனை*இவைகளே. இந்த அவலங்கள் அனைத்தும் அகன்றால் மட்டுமே சத்தியத்தின் பாதையில் இயக்கம் இருக்கும்.அந்த இயக்கத்தை நாம் கண்டாக வேண்டும்.அப்படியேன்றால் மேற்கண்ட தீயதுகள் அகற்றி தமிழக ஆசிரியர்களிடையே* நல்லதுகளைக் கொண்டு வரக்கூடிய ஒரே சக்தி எங்கே இருக்கிறது? 

        அஃது நம் பொதுச்செயலாளர் திருமிகு செ.முத்துசாமி.அவர்களிடமே என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் உணர்ந்து செயல்பட்டால் இயக்கம் சத்தியத்தை.நோக்கி என்பது நிதர்சனமாகும். வெள்ளிவிழாகாணும் கொள்கைக்குன்றை நீதியின் காவலனை* அடலேறு மறவனை பொதுச்செயலாளர்செ.முத்துசாமிஅவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்.
                             இதுவரை காத்து வந்த  சத்தியத்தை என்றும் காத்து சத்திய சமுதாய  மாற்றம் கட்டிட ஆசிரியர்களை பயிற்று விக்க வேண்டுகிறேன்.
சத்தியசித்தாந்தங்களுக்குத் தான் இறுதி வெற்றி ஆதலின் எந்த நிலையிலும் மாறி விடா மல்சத்திய பாதையில் இயக்கம் வளர்த்து சமுதாய மாற்றத்திற்கு
வித்திடவேண்டுகிறேன்.  ஆசிரியர் சமுதாயம் சத்தியத்தை நோக்கட்டும்.அதன் வழியாக சமுதாய மாற்றங்கள் பூத்து மலர்ந்து  *நறுமணம்
வீசட்டும்*

எழுதியவர்:-எம்.அல்போன்ஸா
முன்னாள்மாவட்டச் செயலாளர்.
சிவகங்கை மாவட்டம்.
பொன்விழா மலரிலிருந்து 07-10-1995.
தகவல்:-செ.வடிவேலு

Monday 8 June 2020

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்_வாழ்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மா.கருப்பண்ணன் அவர்கள் 77 பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களில் ஒருவர்

நாமக்கல் மாவட்டத்தில்" 77" தலைமை ஆசிரியர்கள் நான் உள்பட 1_8 _2012 இல் சுகாதாரக் குறைவான தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை பெற்றுக் கொடுத்த பிரச்சனையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டோம்.  அப்போது நான் தமிழக ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினராக இருந்தேன் தவறு ஏதும் செய்யாதவர்கள் நாங்கள் குழந்தைகளின் கல்வி நலனுக்காக உதவிய ஆசிரியர்களாகிய எங்களுக்கு அந்த சங்க பொறுப்பாளர்கள் உதவி செய்ய மறுத்துவிட்டனர்

 அந்த நேரம் நடுத்தெருவில் நின்று கொண்டிருந்த நேரம் அப்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களை சந்தித்தபோது நீ எதற்கும் கவலைப்படாதே ஆசிரியர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்க கூடிய  செ.முத்துசாமி எம்எல்சி ஐயா  அவர்கள் உள்ளார் என வட்டாரச் செயலாளர் திரு ராமசாமி அவர்கள் என்னை அழைத்துச் சென்று 12_8_2012 அன்று நாமக்கல் அவருடைய இல்லத்தில் சந்தித்து அறிமுகம் செய்து வைத்தார்

அப்போது அய்யா அவர்கள் எதற்கும் பயப்படாதே நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார் 

77 தலைமை ஆசிரியர்களை அழைத்துக்கொண்டு ஐயா அவர்கள் கல்வி அமைச்சரை கோவையில்  சந்தித்து முறையிட்டார். அதன்பிறகு தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களை அவருடைய வீட்டில் சந்தித்து முறையிட்டார். அதன் பின்னர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,  தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரிடம் பலமுறை முறையிடப்பட்டது அனைத்திலும் அய்யா அவர்கள் பொறுமையாக எடுத்துரைத்தார்

 பலமுறை தொழில்துறை அமைச்சர், கல்வி அமைச்சரை சந்தித்த பிறகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் கல்வி அமைச்சரிடம் இவர்கள் அனைவரும். எங்கள்ஊர் ஆசிரியர்கள் இவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று அழுத்தமாக கூறி மீண்டும் பணி வழங்க வேண்டும்  என்று கூறினார் கல்வி அமைச்சர் அவர்கள் சிறந்த முறையில் அய்யாவின் வாதத்தை ஏற்றுக்கொண்டு விரைவில் சரி செய்கிறேன் என்று கூறினார் 

11_2_2013  அன்று ஐயா அவர்களின் கடின முயற்சியால் தலைமையாசிரியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தினார்

 பிறகு மோகனூர் ஒன்றியத்தில். இரு ஆசிரியர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில்  சிக்கிய எங்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார் அய்யா  மீண்டும் இயக்குனர், கல்விச் செயலர் ,கல்வி அமைச்சர், தொழில்துறை அமைச்சர் ஆகியோரை பலமுறை பார்த்தும் பயனில்லை 

கடைசியாக நமது அய்யா அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவரிடம் முறையிட்டார் அதற்கு அவர் சரியான முறையில் பதில் தராததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எங்களை 26 6 2013 அன்று மீண்டும் பணியில் அமர்த்திய பெருமை நமது  செ.மு அவர்களையே சாரும் அவர் இல்லை எனில் எங்களுக்கு ஆசிரியர் பணி இல்லை இந்த 77 ஆசிரியர் பிரச்சினையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் தலைவர் ஐயா செ.முத்துசாமி   அவர்கள் 22 முறை சென்னை சென்று ஆணை பெற்று தந்தார் ஐயா அவர்களின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது  எங்கள் பிரச்சனைக்கு கைகொடுக்க  கையில் எடுத்து எங்களை மீட்க முன்வராத மற்ற சங்க பொறுப்பாளர்கள் தவறான உண்மைக்கு புறம்பான கையூட்டு கொடுத்து காரியத்தை முடித்தனர் என்ற பிரச்சாரம் தோல்வியை தழுவியது 

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்  என்ற கூற்று மெய்யானது 
வாழ்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 
வளர்க ஆசிரியர்களின் அறப்பணி 

இவன்
 மா.கருப்பண்ணன் 
 77 பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களில் ஒருவர்

செ.மு.வின் தொண்டு நிழலாடும் நிஜங்கள்*_திரு.ஆர்.அருள்ராசு* தூத்துக்குடி மாவட்ட தலைவர்.

எனது சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நான் 1966-ஆம் ஆண்டு சேலம்  வட்டம் காடையாம்பட்டி ஒன்றியத்தில் பெரிய வடகம் பட்டி  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் முதன் முதலில் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன்

. அதன் பின்பு மறு வருடத்தில் காடையாம்பட்டி ஒன்றிய சேர்மன் வெங்கடாசலம் என்பவர் இதே ஒன்றியம் பண்ணப்பட்டி என்ற ஊரில் துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் வையாபுரி என்பவரை பள்ளி நடைமுறையில் ருக்கும் போதே செருப்பால் அடித்து விட்டார்.இதில் ஆணையாளர் அவர்கள்
சரியான நடவடிக்கை எடுக்கவில்லை மருத்துவ அலுவலரும் ஆசிரியர்க்கு எதிராக சான்றிதழ் வழங்கினார்.
எனவே ஒரு கண்டன பேரணிசுமார் பத்தாயிரத்துக்கும்*. அதிகமான ஆசிரியர்களை திரட்டிக் காடையாம்பட்டிக்கும், பண்ணப்பட்டிக்கும் 10 கிலோ மீட்டர் தூரம் பெங்களூர்-சேலம் சாலையில் நடந்தே சென்று நடுப்பட்டி  ஆணையாளரின் வீட்டு முன்பு *ஆணையாளரே! ஆணையாளரே!*அடங்கி கிடப்பது ஏன்! ஆணையாளர் தங்கப்பனே அடங்கி கிடப்பது ஏன்? கோஷம் போட்ட பின்பு தீவட்டிபட்டி வழியாக பூசாரிப்பட்டி வந்து சேர்மன் வெங்கடாசலம் வீட்டுக்கு முன்பு கைது செய் ,கைது செய்,குடிகாரன் வெங்கடாசலத்தை  கைது செய் என்று விண்ணதிர கோஷமிட்டு இறுதியாக
பள்ளப்பட்டி சென்று கண்டன கூட்டம் நடத்தப்பட்டது.இதைச் செய்தவர் நமது பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி ஆவார்கள்.
அன்று அவர் ஒன்றுபட்ட ஆசிரியர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலர் ஆவார்.என்னை அவருடைய பேச்சாற்றலும்,இளமை  துடிப்பும்,அவரது போராட்டக் குணமும் என்னை வெகுவாக பற்றிக் கொண்டது.பெத்தநாயக்கன்பாளையம் வட்டார  A.E.O திரு.கந்தசாமி என்பவர்
அன்றைய கல்வி அமைச்சர் அரங்கநாயகம்.என்பவர் ஆணையால் அன்றைய கல்வி இணை இயக்குநர்  ஆனந்தராஜ்.என்பவரது பேச்சை கேட்டுக்கொண்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்களையும், உறுப்பினர்களையும் 
மதிக்காமல் அலட்சியமாக நடந்து வந்தார்.இதை பொதுச்செயலாளர் செ.முத்துசாமி கவனத்திற்கு‌ கொண்டு சென்றோம்.
உடனடியாக அந்த A.E.O.வை அவர் எந்த மேல்நிலைப் பள்ளியிலிருந்து வந்தாரோ அதே பள்ளிக்கு மீண்டும் உதவி ஆசிரியராக அனுபப்பட்டார். அன்றைய இயக்குநர் கி.வெங்கடசுப்ரமணியம்.A.E.O.வுக்கு எவ்வளவு சொல்லியும் பொதுச்செயலாளர் அதை ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பியதுவரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல ஒரு பெரிய சகாப்தமும் கூட.

சேந்தமங்கலம் வட்டார  A.E.O.சண்முகசுந்தரம் அவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்களுக்கு முறையற்ற இடமாற்றம், வேண்டுமென்றே* G.P.F நிதியிலிருந்து தாமதமாகக் கடன் வழங்குதல் போன்ற காரணங்களுக்காக. A.E.O.வேலையை நீக்கம் செய்து மீண்டும் அவரை பழையபடி உயர்நிலைப் பள்ளிக்கே அனுப்பியதும் மறக்கமுடியாத நிகழ்ச்சி
யாகும்
  .சத்துணவு போராட்டம் சாதாரணமானது அல்ல அதையும் ஆசிரியர் பொறுப்பில் இருந்து நீக்கி 67 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்த பெருமையும் நமது பொதுச்செயலாளர் செ.முத்துசாமிக்கே பொருந்தும்
.
சட்டோபாத்தியாயா  கமிஷன் முன்பு பல முறை சாட்சியங்கள் அளித்து *தேசிய ஊதிய கமிஷன்*அமைத்து தந்தவர்.மத்திய அரசுக்கு இணையான சம்பளம் பெற  முழுக்க  முழுக்க காரணமானவர் நமது பொதுச்செயலாளர் 'செ.மு..ஆவார்.  நமது பொதுச்செயலாளரின் திறமையைக் கண்டு மத்திய அரசு ரஷ்யாவில் நடைபெற்ற அணுஆயுத குறைப்பு மாநாட்டிற்கு அனுப்பியது.அங்கு தனது கருத்தையும் திறம்படக் கூறி உலகளவில் தன்னை
ஒரு திறமைசாலி என்று நிருபித்துக் காட்டியவர் நமது பொதுச்செயலாளர் செ.மு.

டாக்டர் புரட்சித்தலைவர்  எம்.ஜி.ஆர்..அவர்கள் அரசியலுக்கு அழைத்த போது அவருடன் போகாத ஒரே கொள்கை வீரன் நமது பொதுச்செயலாளர் செ.மு.தான்.

பதவிக்கு என்றுமே அடிபணியாதவர்.இவரது தொண்டு.*துவக்கப் பள்ளி*ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல.உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி,கல்லூரிப் பேராசிரியர்கள் வரை பணி செய்தவர்.அவர்கள் போராடிய போது இவரை அழைக்காவிட்டாலும் உடனே களத்திற்குச் சென்று குரல் கொடுத்து பல சலுகைகளை,கோரிக்கைகளை வாங்கிக்  கொடுத்தவர்.

எழுதியவர்:-மறைந்த திரு.ஆர்.அருள்ராசு
மாவட்டத் தலைவர்.
தூத்துக்குடி மாவட்டம்
தகவல்:- செ.வடிவேலு.

நினைத்துப் பார்க்கிறேன் செ.மு.வின் சேவையை

நினைத்துப் பார்க்கிறேன்.இப்பொழுதும் நினைத்துப் பார்க்கிறேன். கல்வி வளர்ச்சிக்காகவும், ஆசிரியர்களின் வேலை பாதுகாப்பிற்காகவும், மாஸ்டர் இராமுண்ணி அவர்கள் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்
இயக்கநிறுவனராக இருந்து செயல்பட்ட காலத்தில் கொல்லிமலை அடிவாரத்தில் சேந்தமங்கலத்தில் கண்டெடுத்த விலை மதிக்க முடியாத முத்துதான் செ.மு. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை சந்தித்து ஒன்று சேர்த்து
சங்கம் அமைத்து பல மாநாடுகள்,சைக்கிள் பேரணிகள், பல கொள்கை போராட்டங்களை துணிந்து நடத்திய காலங்களில் அம்மனிதர் அனுபவித்த
தொல்லைகள், அப்பப்பா! எத்தனை துரோகங்கள்,  இதன் மூலம் அவருக்கு எத்தனை அனுபவங்கள் எத்தனை ஆதரவுகள், இடை இடையே எத்தனை எதிர்ப்புகள்  இத்தனைக்கும் பின்னால் அவர் அடைந்த வெற்றியை நினைக்கும் போது எத்தனை களிப்பு.

இந்த இயக்கத்தின் வளர்ச்சியும்,வரலாறும், இயக்கத்தின் தோற்றம், தோற்றுவிக்க வேண்டிய சூழ்நிலை,தொடர்ந்த சூழ்நிலைகள்,அடைந்த வெற்றிகள்.இவை தொடர்கதையாக வளரும். 


மாஸ்டர் இராமுண்ணி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டு, அவருக்குப் பின் ஆசிரியர் சமுதாயத்தால் பாராட்டப்பட்ட செயல்வீரர் செ.முத்துசாமி அவர்களின் வளர்ச்சியை,புகழை ஜீரணிக்க முடியாத அன்றைய அரசும்,அதிகாரிகளும், பலஹுனமான நம் ஆசிரிய சகோதரர்களை பயன்படுத்தி சங்கத்தை உடைப்பதில் ,மகிழ்ச்சியடைந்ததையும்,சங்கம் பிளவுபட்ட பின்பு செ.முத்துசாமியின் வளர்ச்சி, மேலும் மேலும் உயர்ந்து உயர்ந்து மேலவை உறுப்பினராக(M.L.C.)அமர்ந்து சிம்மக்குரலுடன் ஆசிரியர்களுக்காக,  பல பிரச்சனைகளை எழுப்பி எல்லோரின் அன்பைப் பெற்று, அவரின் அணுகுமுறையை எல்லோரும் பாராட்டி மகிழ்ந்ததையும் நினைத்துப் பார்க்கிறேன்.

முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்களை பொதுச்செயலாளர் என்ற முறையில் மாஸ்டர் இராமுண்ணி அவர்களுடன் சென்று சந்தித்துப் பேசிய பேச்சுக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கச் செய்தது.

தனியார் பள்ளி நிர்வாகிகளைப் பற்றி,ஆசிரியர்களது ஊதியம்,நிர்வாகச் செலவு,பர்னிச்சர் கிராண்ட் எல்லாம் அரசு கொடுக்கும் போது,பள்ளியை சுத்தம்  செய்வதற்கு வருடத்தில் ஒரு தடவை சுண்ணாம்பு அடிப்பதற்கு நிர்வாகி என்ற ஒருவர்,இம்மாதிரி பள்ளிகளுக்கு எதற்கு?
என்று கேட்டார்.தனியார் பள்ளியின் நிலையையும் பள்ளி நிர்வாகத்தில் நிர்வாகிகளுக்குள்ள பொறுப்பைப் பற்றியும் அறிஞர் அண்ணா அவர்கள் ஆழ்ந்த கவனம் செலுத்துவதைக் கண்ட நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமிஅவர்கள் அன்று முதல் இன்று வரை தனியார்  பள்ளி ஆசிரியர்களுக்கு அவர் சேவை செய்து வெற்றி வாகை சூடிய நிகழ்ச்சிகளை மறக்கமுடியுமா? மறுக்கத்தான் முடியுமா!

மேலவை(M.L.C)உறுப்பினராக இருந்த காலம் எல்லாம் ஆசிரிய சமுதாய வளர்ச்சிக்காகவே செயல்பட்டார் என்பதை எல்லோரும்ஒப்புக் கொண்டுள்ளனர்.அன்றைய முதல்வர்களாக இருந்த டாக்டர் கலைஞர்புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்*  ஆகியோரிடம் நயமாக  அவருக்கே உரித்தான வழியில்,ஆண்மையுடன் சந்தித்து வாதாடிய விதம்,அணுகுமுறைகளை பாராட்டாதவர்களே கிடையாது.அவருடைய
பேச்சு ஆற்றலை பாராட்டாத உறுப்பினர்களோ அமைச்சர் பெருமக்களோ,அதிகாரிகளோ இல்லையென்று துணிந்து கூறலாம்.இவருடன் சரஸ்வதி இருப்பதாலோ,என்னவோ இம்மனிதர் எந்தக் காரியத்தையும் பேச்சாற்றிலினால் சாதித்து வருகிறார்.இவரின் ஆற்றல் தமிழகத்தில் மட்டுமல்ல டில்லி வரை  சாதனையாளன் செயல் வீரன் என்ற புகழ் உண்டு.

1981மார்ச்12ம் நாள் டில்லியில் பாரதப் பிரதமரிடம் கோரிக்கை வைத்து வெற்றி கண்ட காட்சி 2500ஆசிரியர்களை சந்திக்க வைத்து பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி,உடன் புகைப்படம்,எடுத்து மாநாடு நடத்திய காட்சி களையும் நினைத்துப் பார்த்து மகிழ்கிறோம்.

தமிழகத்தில் ஆசிரியர்கள் சமுதாய வரலாற்றிலும், கல்விவரலாற்றிலும்,சங்கவரலாற்றிலும்முத்திரை பதித்தவர் *நம் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி* சங்கம் உடைந்து பிடித்தவுடன் வரலாற்று
சிறப்பு மிக்க தென்மண்டலமாநாட்டைநடத்தி மாண்புமிகு அமைச்சர்கள் நாஞ்சிலார்*அவர்களையும், அரங்கநாயகம் அவர்களையும்,மேதகு மேயர் முத்து அவர்களையும் அழைத்து சங்க வரலாற்றின் பெருமையை உயர்த்தி
காட்டியவர் நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி

இயக்க வளர்ச்சிக்கு அன்று தென்மண்டலத்தில் உதவிய *மறைந்த பெரியவர் பெரியகுளம் வெள்ளைச்சாமி*அவர்களையும்,போடி பொன்னையா அவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.திரு.செ.முத்துசாமி அவர்களின் வளர்ச்சியையும்,,புகழையும்,செயல்பாடுகளையும்ஜீரணிக்க முடியாதவர்கள் திசைமாறி சென்றதையும்,சென்றவர்கள் உணர்ந்து தன் இருப்பிடம் நோக்கி வந்ததையும்,இனியும் வந்து கொண்டிருப்பவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன். குறைகளைக் கூறிக்கொண்டே குற்றம் பார்த்து தேடித் திரியும் கோமாளித் தலைவர்கள்*கோர்ட்டுக்கு சென்று தோல்வி அடைந்தவர்கள்*.

கணக்குகேட்டவர்களின் காலத்தையும்,நம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் முதல் தலைவர் திரு.கு.இரத்தினம் முதல் இன்றையக் தலைவர் திரு.இ.ம.வேலுசாமி வரை சாதித்த வரலாற்றையும்,இடையே வந்த தலைவர்களின் பலம் பலஹீனத்தையும் நினைத்துப் பார்க்கிறேன்.

நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்களுக்கு நட்புச் செல்வம் மிகுதி,*கலைஞர்கள், அறிஞர்கள்,வணிகர்கள் அரசியல்வாதிகள் என்று*எல்லாத் துறையிலும் இன,மொழி வேறுபாடின்றி அவர்களுக்கு ஏராளமான நண்பர்கள் உண்டு.

இவரிடம் ஆணவம் இருந்தது ஆடம்பரம் இல்லை,தாராளம், பண்பு இருந்தது,படாடோபம் இல்லை,பண்பு இருந்தது,பகைமை இல்லை. கூட்டங்களில் திரு.செ.முத்துசாமி அவர்களின் நினைவாற்றல் அபாரமானது.இனிமையாகப்பேசுவார், கருத்தளவில் அழுத்தம் குறையாதுஆசிரியர்களிடையே அவர் குலவிளக்கு,வருங்கால தலைமுறைக்கு உணர்வு ஊற்றாக அவர் வழிகாட்டிக் கொண்டிருப்பார்.அவரின் சேவைகளைப் போற்றும் வகையில்  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் ஔபொன்விழா மாநாட்டில்,*மாமனிதர் செ.முத்துசாமியின் தொடர் பணிக்கு வெள்ளிவிழா*கொண்டாடுவது நம் சிந்தனைகளை மேலும் குளிரச்செய்கிறது.அவரின் புகழ் சொல்லச் சொல்ல விரிவடைந்து கொண்டே போகும்.அந்தச் சிந்தனையிலேயே நான் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் அங்கத்தினராக இருப்பதில் பெருமைப் படுகிறேன்.

*முத்துசாமி பல்லாண்டு வாழ்க!*
வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்.
 நான் ஓய்வு பெற்றும் அவரது
சேவையை நினைத்து
புதுவாழ்வு பெறுகிறேன்
வாழ்க முத்துசாமி
வளர்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


எழுதியவர்:-திரு.சி.வேதகிருபாகரன்*
முன்னால் மாநிலத்தலைவர்.
தகவல்:-செ.வடிவேலு.
(நேற்றைய தொடர்ச்சி) பொன்விழா மலரிலிருந்து..07-10-1995.

ஆசிரியர் காவலன்- செ.மு._திரு.இ.இரத்தினம்

" தமிழனென்று சொல்லடா- தலைநிமிர்ந்து நில்லடா" என்று இனிய சொற்களால் பாட்டிசைத்து மக்களை நாட்டு விடுதலைப் போராட்டத்தில் வீறுகொள்ளச் செய்த " நாமக்கல் கவிஞர்" அவர்கள் பிறந்த மண்ணிலே தோன்றி, தாழ்ந்து கிடந்த, கூனிகுறுகிப் போயிருந்த ஆண்டான் அடிமை நிலையிலிருந்த ஆசிரியர் சமுதாயத்தை தலைநிமரச் செய்த, நாடு உலகு அறியச் செய்த பெருந்தகை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலர் மதிப்புக்குரிய பெருந்தகை திருமிகு  செ.முத்துசாமி அவர்கள் ஆற்றிய பணிகள் ஏராளம், ஏராளம்.

அவைகளில் ஒரு சில வற்றை மட்டும் இங்கே உங்கள் பார்வைக்கு குறிப்பிட கடமைப்பட்டுள்ளேன்.

1968 நவம்பர் திங்களில்பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று தமிழகமெங்கும் சுற்றுப் பயணம் செய்து ஆசிரியர்களின் அவலநிலைமையை எடுத்துக்கூறி ஆசிரியர்கள் இடையில் உணர்ச்சியினை ஊட்டினார்.ஆசிரியர் இயக்கத்திற்கென தனிக்கொடி, சின்னம் கண்டார்.ஆசிரியர்கள் கோரிக்கைகள் தொடர்பாக மாநிலமெங்கும் கோரிக்கைகள் அடங்கிய" அஞ்சல் அட்டை இயக்கத்தை" ஆசிரியர் தினமான செப்டம்பர் திங்களில் நடைபெறப் செய்தார்.

1969 ல் சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவின் முடிவின்படி இரவோடு இரவாக கொட்டும் மழையில் லாரியில் அழைத்து சென்று" சென்னை கடற்கரையில் பேரறிஞர் அண்ணா சமாதி முன் கோரிக்கைகள் வெற்றி பெற உறுதி மொழி எடுத்துக் கொண்டு கோட்டை நோக்கி அங்கிருந்து ஊர்வலமாக சென்று இடையில் ஊர்வலம் தடுக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் மட்டும் கோட்டைக்குச் சென்று கோரிக்கை மனுக் கொடுக்கப்பட்ட நிகழ்ச்சி மறக்க இயலாததாகும்.தமிழகத்தில்" மேற்கு மலை முகட்டிலிருந்தும் தென்முனை குமரியிலிருந்து" மிதிவண்டிப் பேரணி நடத்தி பெரியார் திடலில் கோரிக்கை மாநாடு நடத்திக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மாநாட்டுச்
செய்தியை இருட்டடிப்புச் செய்த" தினத்தந்தி" செய்தித்தாளை தீயிட்டு கொளுத்தினர்.திடல் முழுவதும் கொழுந்து விட்டு எரிந்து புகைமண்டலம் சூழ்ந்து கொண்டு நிலையில் சென்னை நகர காவல் துறை ஆணையரால் அச்சூழ்நிலையைக் கட்டுப்படுத்த இயலாத போது நமது பொதுச்செயலாளர் அவர்கள் தலையிட்டு வேண்டுகோள் விட்ட மறுவினாடி புகைமண்டலம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.


மாநாட்டில் சிறப்புரை

   ஆற்றிய அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு" நாவலர் நெடுஞ்செழியன்" அவர்கள் சொற்களால் மாநாட்டுப் பந்தலே அதிரும் அளவுக்கு பெருங்கொந்தளிப்பு ஏற்பட்டப் போது பொதுச்செயலாளரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரில் ஊசி முனை அமைதி ஏற்பட்டது மறக்க இயலாத நிகழ்ச்சி
    1969 ல் கோரிக்கை மாநாடு நடத்தி வெற்றி கண்டதின் அடிப்படையில் இவரது அயராதுஉழைக்கும் பணியை உணர்ந்த உயர்நிலை முதல் கல்லூரி வரை பணியாற்றும் ஆசிரியர்கள் 1970 ல் நடைபெற்ற சட்டமன்ற மேலவைத் தேர்தலில் வெற்றி பெறச் செய்த நிலை ஆசிரியர் இயக்க வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒன்றாகும்.
  இவரது பணியின் காரணமாக, சிறிதும் கையூட்டுப் பெறாத நிலையில் மீண்டும் 1978 ல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிபெறச் செய்தனர்.இவரது சட்டமன்றப் பணி அனைத்து தரப்பினராலும் போற்றப்பட்ட நிலை " டாக்டர்கலைஞர்" அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சட்டமன்றத்தில் ஆசிரியர் பிரச்சனை ஒன்றையே மையமாக  வைத்து வாதாடி வெற்றி கண்டுள்ளார். 

  இயக்க நிறுவனர் மாஸ்டர் இராமுண்ணிக்கு மணிவிழா மாநாட்டினை 1970 டிசம்பரில் மதுரை மாநகரிலே நடத்தி வெற்றி கண்டுள்ளார்.

அம்மாநாட்டில் கலந்து கொண்ட அன்றைய பொதுப் பணித்துறை அமைச்சர் மாண்புமிகு ப.உ.சண்முகம் அவர்கள் முதல்வர் அவர்களின் அனுமதியின் பேரில் இயக்கத்திற்கென கட்டடம் கட்ட சென்னை மாநகரிலே அடிநிலமும் நிதியும் வழங்க உறுதி மொழியினை அளித்தார்.

முதன் முதலில்1972 ஏப்ரல் 30 ம் நாள் கல்வி அமைச்சர் அவர்கள் இல்லத்தின் முன் தனது தலைமையில் கோரிக்கைகளுக்காக மறியல் போராட்டம் நடத்தி 18 பேருடன் முதன் முதலில்  சிறையேகினார்.
 அதைத் தொடர்ந்து தமிழகமெங்கும் இருந்து ஆசிரியர்கள் தலைநகர் திரண்டு18 நாட்கள் தொடர்ந்து மறியல் செய்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறைப்பட்டனர்.அப் போராட்டத்தின் போது சிறையிலேயே செயற்குழு கூடி அரசினால் கொடுக்கப்பட்ட அரசாணைகள் பெறப்பட்டு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது வரலாற்று முதற்படியாகும்.

1981 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் முதல் வாரத்தில் தமிழகமெங்கிருந்தும்
2500 க்கு மேற்பட்ட ஆசிரியர்களை நாட்டின் தலைநகராம் டில்லி மாநகருக்கு அழைத்துச் சென்று அங்கே " மாவ்லங்கர்" கலையரங்கத்தில் மாநாட்டினை நடத்தி நடுவண் அரசு அமைச்சர் பெருமக்களும் அரசியல்  கட்சித் தலைவர்களையும் கலந்து கொள்ள ஏற்பாடு செய்தார்.நாட்டின் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களிடம் கையொப்பம் பெறப்பட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டு, தேசீய ஊதியக்குழு அமைக்க வாதாடினார்.

அதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட டாக்டர்சட்டோபாத்திய கல்விக் குழுவின் அழைப்பின் பேரில் குழுவின் முன் சாட்சியம் அளித்து ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு வாதாடினார்.
  தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர்அவர்களால் பள்ளிகளில் சத்துணவு துவக்கப்பட்டு,தலைமை ஆசிரியர்களின் தலையில் அப்பணி சுமத்தப்பட்ட நிலையில் நாடெங்கிலும் *ஆசிரியர்கள் *அலுவராலும்,பொதுமக்களாலும் ஆசிரியர்கள் துன்புறுத்ப்பட்டநேரம்.அந்நிலையினை கண்டித்து தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற சத்துணவு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நமது பொதுச்செயலாளரை அன்றைய தலைமைச் செயலாளர்க.திரவியம்அவர்கள் சிறப்பு செய்தி ஆள் மூலம் மாமல்லபுரத்திற்கு அழைத்து பேசி விரைவில் புதிய ஏற்பாடு செய்யும் வரை போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்ளும் பொருட்டு எழுத்து மூலம் வேண்டுகோள் விடப்பட்டதின் பேரில் தலைமை ஆசிரியர்கள் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டதும்,
  அதற்கென தனியாக ஆயிரக்கணக்கில் அமைப்பாளர்கள் புதியதாக நியமனம் செய்யப்பட்டதும் வரலாற்று உண்மை.

1985ல் " ஜாக்டீ" அமைக்கப்பட்டு 44 நாட்கள்‌ போராட்டம் துவக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர்.உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்13 பேரில் நமது பொதுச்செயலாளர் மட்டும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டது வரலாறு.அச்சிறையில் ஈரோடு மாவட்ட ஆசிரியர் கருப்பண்ணன் உயிர் நீத்த செய்தி அறிந்து ஆசிரியர்கள் வெகுண்டெழுந்தனர்
.
அந்நிலையில் அச் சிறையிலிருந்து நமது பொதுச்செயலர் அவர்கள் ஆசிரியர்களின் உணர்ச்சியினை உணர்ந்து அமைதி காத்தனர்.அன்றைய பொழுது பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் உயிர் காத்தது வரலாற்று பெருமை சேர்த்தனர்.

1988ல் நடைபெற்ற போராட்டத்தின் மூலம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஐந்தாவது ஊதியக்குழு அமைக்கவும் நடுவணரசு ஊழியர்களின் ஊதியம் பெற உறுதிமொழி பெற்றார்.அத்துடன் மருத்துவபடியினையும் பெற்றுத் தந்தார்.அன்றைய காலகட்டத்தில் *தலைமை நிலையச் *செயலாளராகப் பொறுப்பேற்று அவருடன் இணைந்து பணியாற்றியது எனது வாழ்நாளில் மறக்கலாகாத ஒன்றாகும்...ஐந்தாவது ஊதியக்குழு வினால் தலைமை ஆசிரியர்கள் ஊதிய நிலை பரிதாபகரமான நிலை.அத்துடன் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக முன் அவரது சீரிய தலைமையில் போராட்டம்.உண்ணாவிரதப்போராட்டம் நிறைவடையும் முன் அதற்கான அரசு ஆணைபந்தலிலேயே வழங்கப்பட்டது.

" டிட்டோஜாக்" அமைப்பின் மூலம் ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் மீது ஆணைகள் பெறப்பட்டு வெற்றிக் கண்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி முழு ஊதியம் பெற்றுத் தந்தது வரலாற்றுச் சான்று.

இப்போராட்டத்தின் மூலம் நடுநிலைப்பள்ளி பட்டாதாரி தலைமையாசிரியர்கள் இன்று கல்வித் துறையின் நிர்வாகப் பொறுப்பேற்று உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவரது சீரிய முயற்சியின் பொருட்டேயாகும்.இந்நிலை தொடக்கக் கல்வியின் வரலாற்றில்
பொன்னேடாகும்.

ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலர் பொறுப்பேற்றதிலிருந்து தனது வாழ்வின்முழுவதும் ஆசிரியர்களின் நிலை உயர போராட்டங்கள் மூலமும், அரசு அலுவலர் நேர்காணல் மூலமும், சட்டமேலவை மூலமும் அயராது இருபத்தேழு ஆண்டு காலமாக உழைத்து வரும் பெருமதிப்பிற்கும் பெருமைக்கும் உரிய பொதுச்செயலர் திருமிகு.செ.முத்துசாமி அவர்களின் பணி மேலும் சிறக்க உயர வெள்ளிவிழாவோடு நிற்காது பொன்விழா காண விழையும் தங்களுக்கு நல்வாழ்த்தினையும் வணக்கத்தினையும் பெருமையோடும் பூரிப்போடும் அர்ப்பணிக்கிறேன்.

எழுதியவர்:- திரு.இ.இரத்தினம் , தருமபுரி மாவட்டத் தலைவர்

பொன்விழா மலரிலிருந்து.07-10-1995
தகவல்:- செ.வடிவேலு.

ஆசிரியர்களின் விடிவெள்ளி...செ.மு.-(திரு.துரை.ஆறுமுகம்,)

         நாடு விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் ஆகியும் ஆசியர் பெருமக்கள் விடுதலை அடைந்திட வில்லை.அந்த தருணத்தில்1967 ல் இயக்கத்தின் பொதுச்செயலரின் நேர்முக உதவியாளராக பொறுப்பேற்று தமிழ்நாட்டில் பட்டி,  தொட்டிகள் தோறும் சென்று ஆசிரியர்களை சந்தித்தும் அவர்களின் பிரச்சனை அறிந்தும் வந்தவர்.1968 ல் இயக்கத்தில் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, இதோ வந்தேன்" ஆசிரியர்களின் முழு நலனும் என் நலன்" " ஆசிரியர்களின் குறை என் குறை" என்று குரல் கொடுத்தவர் ஆசிரியர்களின் விடிவெள்ளியான நமது பொதுச்செயலாளர் திரு.செ.முத்துசாமி ஆவார்

             .வரலாறு காணா ஆசிரியர்களின் பேரணி சென்னை வீதிகள் காணாத சிறப்பு ஆ! இவ்வளவு ஆசிரியர்களாக? இவர்களுக்கு இவ்வளவு குறைகளா? என்று  சென்னை மக்கள் கண்டு வியந்த மாநாடு 1969 கோரிக்கை மாநாடு.நான்கு சுவர்கட்கு மத்தியில் இருந்த ஆசியர்கட்கு தங்கள் பிரச்சனைகளை கோடிட்டு காட்டிப் போராட நடு வீதிக்கு கொண்டு வந்தவர் தான் நம்மால்" விடிவெள்ளி" என்று அழைக்கப்படும் திரு.செ.முத்துசாமி.

                       அன்றுவரை அடிமைகளிலும் அடிமைகளாக நடத்தப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்களின் சில பிரச்சனைகளுக்கு இந்த மாநாட்டில் தானே தீர்வு காணப்பட்டது.
                   வீட்டு வாடகைப்படி, அரசு ஊழியர்களைப் போல் மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, தனியார் பள்ளி ஆசிரியர்கட்கு பணி பாதுகாப்பு குழு ஆகியவை கிடைத்தது.அதனால் தானே இவரை" ஆசிரியர்களின் விடிவெள்ளி" என்கிறோம்.
1970 ல் இயக்க நிறுவனருக்கு மதுரையில் மணிவிழா கண்டவர்.
1970 ல் வாக்குரிமையில்லாத தொடக்கப்பள்ளி ஆசிரியர் மேலவை உறுப்பினரானார்.அதனால் ஆசிரியர் பதவியிலிருந்து டிஸ்மிஸ் ஆனார்.

       1972 ல் உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்தில் ஆசிரியர் தொகுதியில் அறுவர்- பட்டதாரி தொகுதியில் அறுவர் மேலவையில் இருந்தும் இவர் தானே அவர்களை தேடிச் சென்று முதல் நாள் போராட்டத்தில் முதல் கைதியானார்!
 1972ஏப்ரல் 30 ல் குடும்பகட்டுபாட்டிற்கு ஆசிரியர்களை பயன்படுத்திய கொடுமையினை நீக்கி 18 நாள் போராட்டம்  1020 ஆசிரியர்கள் சிறையில் இதிலும் திரு.செ.முத்துசாமி தானே முதல் கைதி!.கலைஞரிடம் பெற்ற பெரிய வெற்றி. எண்ணிப்பார்த்திடாத ஆசிரியர்கள் இப்படி ஒரு போராட்டம்- சிறை- கோரிக்கை வெற்றி இவைகளுக்கு வித்திட்டது யார்?  ஆசிரியர்களின் விடிவெள்ளி திரு.செ.முத்துசாமி தானே.
இவரின் சாதனைகள்:-
தொடர்ந்து 1968 முதல் இன்று வரை 27 ஆண்டுகள் பொதுச்செயலாளரர்.12 ஆண்டுகள் மேலவை உறுப்பினர்( வாக்குரிமை இல்லாத இவர்) 110 நாட்கள் தமிழ்நாடெங்கும் பயணித்து முதன் முதலாக மாநிலத் தலைநகரில் இயக்கத்திற்கு ஒரு சொந்தக் கட்டிடம் கண்டவர்.தலைமைஆசிரியர்களுக்கு தனிப்படி,
ஒப்படைப்பு விடுப்பு ஆணை பெற்றது, தனி ஒரு ஆசிரியர்க்கும் இரயில் கட்டண சலுகை,
முதன் முதலாக டெல்லிக்கு 2500 ஆசிரியர்களை அழைத்துச் சென்று இந்தியப் பிரதமரிடம்
" மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் ஆசிரியர்கட்கும் தேவை" என வாதிட்டது.( அதன் பலன் 01-06-1988 முதல் கிடைத்தது)
" ஜேக்டி போராட்டத்தில் 13 தலைவர்கள் இருந்தும் அரசு Fire Brand செ.முத்துசாமியை தானே சிறையில் அடைத்தது". இராஜ்யசபா பெட்டிஷன்
கமிட்டியில் தமிழகத்து ஆசியர்கட்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும் என மனு கொடுத்து   ஒன்றரை மணி நேரம் கோரிக்கையின் நியாயத்தை எடுத்துக் கூறியது.வரி கொடா இயக்கம் போன்று போராடி சத்துணவிற்கென தனி ஊழியர்களை நியமித்தது.இன்று கைமேல் பலன் நடுநிலைப் பள்ளி பட்டம் பெற்ற தலைமையாசிரியர்கள் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக நியமனம் செய்ய உழைத்தது

.ஆசிரியர்களின் பிரச்சனைகளை ஆசிரியர்களே அறியாத போது எடுத்துச் சொல்லி  தீர்வு கண்டவர் தானே திரு.செ.முத்துசாமி என்ற விடிவெள்ளி.

அன்று முதல் இன்று வரை தொடக்கப் பள்ளி ஆசிரியரின் பொதுச் செயலாளரான இவர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சனைகள் எதுவானாலும், எப்போதும், இன்னார், இனியர் என்று பாராமல் நமக்காக வாதாடி போராடிப் பெற்றுத் தந்தவர்.அதற்காக குடும்பத்தை மறந்து பாடுபட்டு வருபவர் நமது பொதுச்செயலாளர் விடிவெள்ளி திரு.செ.முத்துசாமி ஆவார்.

இவரால் பெற்ற நன்மைகள் ஏராளம், இவர் தான் ஆசிரியர்களின் விடிவெள்ளி சமுதாயக் காவலர் என்பதில் ஐயமே இல்லை.


எழுதியவர்:-
 திரு.துரை.ஆறுமுகம், 
 மாவட்டச் செயலர்.திருவண்ணாமலை மாவட்டம்.

பொன்விழா மலரிலிருந்து 07-10-1995
தகவல்:- செ.வடிவேலு.