Monday 8 June 2020

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்_வாழ்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மா.கருப்பண்ணன் அவர்கள் 77 பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களில் ஒருவர்

நாமக்கல் மாவட்டத்தில்" 77" தலைமை ஆசிரியர்கள் நான் உள்பட 1_8 _2012 இல் சுகாதாரக் குறைவான தொழில் செய்வோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை பெற்றுக் கொடுத்த பிரச்சனையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டோம்.  அப்போது நான் தமிழக ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினராக இருந்தேன் தவறு ஏதும் செய்யாதவர்கள் நாங்கள் குழந்தைகளின் கல்வி நலனுக்காக உதவிய ஆசிரியர்களாகிய எங்களுக்கு அந்த சங்க பொறுப்பாளர்கள் உதவி செய்ய மறுத்துவிட்டனர்

 அந்த நேரம் நடுத்தெருவில் நின்று கொண்டிருந்த நேரம் அப்போது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பாளர்களை சந்தித்தபோது நீ எதற்கும் கவலைப்படாதே ஆசிரியர்களுக்காக உழைத்துக் கொண்டிருக்க கூடிய  செ.முத்துசாமி எம்எல்சி ஐயா  அவர்கள் உள்ளார் என வட்டாரச் செயலாளர் திரு ராமசாமி அவர்கள் என்னை அழைத்துச் சென்று 12_8_2012 அன்று நாமக்கல் அவருடைய இல்லத்தில் சந்தித்து அறிமுகம் செய்து வைத்தார்

அப்போது அய்யா அவர்கள் எதற்கும் பயப்படாதே நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார் 

77 தலைமை ஆசிரியர்களை அழைத்துக்கொண்டு ஐயா அவர்கள் கல்வி அமைச்சரை கோவையில்  சந்தித்து முறையிட்டார். அதன்பிறகு தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களை அவருடைய வீட்டில் சந்தித்து முறையிட்டார். அதன் பின்னர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,  தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோரிடம் பலமுறை முறையிடப்பட்டது அனைத்திலும் அய்யா அவர்கள் பொறுமையாக எடுத்துரைத்தார்

 பலமுறை தொழில்துறை அமைச்சர், கல்வி அமைச்சரை சந்தித்த பிறகு தொழில்துறை அமைச்சர் அவர்கள் கல்வி அமைச்சரிடம் இவர்கள் அனைவரும். எங்கள்ஊர் ஆசிரியர்கள் இவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என்று அழுத்தமாக கூறி மீண்டும் பணி வழங்க வேண்டும்  என்று கூறினார் கல்வி அமைச்சர் அவர்கள் சிறந்த முறையில் அய்யாவின் வாதத்தை ஏற்றுக்கொண்டு விரைவில் சரி செய்கிறேன் என்று கூறினார் 

11_2_2013  அன்று ஐயா அவர்களின் கடின முயற்சியால் தலைமையாசிரியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தினார்

 பிறகு மோகனூர் ஒன்றியத்தில். இரு ஆசிரியர்கள் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில்  சிக்கிய எங்களை அழைத்துக் கொண்டு சென்னை சென்றார் அய்யா  மீண்டும் இயக்குனர், கல்விச் செயலர் ,கல்வி அமைச்சர், தொழில்துறை அமைச்சர் ஆகியோரை பலமுறை பார்த்தும் பயனில்லை 

கடைசியாக நமது அய்யா அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவரிடம் முறையிட்டார் அதற்கு அவர் சரியான முறையில் பதில் தராததால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எங்களை 26 6 2013 அன்று மீண்டும் பணியில் அமர்த்திய பெருமை நமது  செ.மு அவர்களையே சாரும் அவர் இல்லை எனில் எங்களுக்கு ஆசிரியர் பணி இல்லை இந்த 77 ஆசிரியர் பிரச்சினையில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நிறுவனர் தலைவர் ஐயா செ.முத்துசாமி   அவர்கள் 22 முறை சென்னை சென்று ஆணை பெற்று தந்தார் ஐயா அவர்களின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்தது  எங்கள் பிரச்சனைக்கு கைகொடுக்க  கையில் எடுத்து எங்களை மீட்க முன்வராத மற்ற சங்க பொறுப்பாளர்கள் தவறான உண்மைக்கு புறம்பான கையூட்டு கொடுத்து காரியத்தை முடித்தனர் என்ற பிரச்சாரம் தோல்வியை தழுவியது 

தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்  என்ற கூற்று மெய்யானது 
வாழ்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி 
வளர்க ஆசிரியர்களின் அறப்பணி 

இவன்
 மா.கருப்பண்ணன் 
 77 பாதிக்கப்பட்ட தலைமை ஆசிரியர்களில் ஒருவர்

No comments:

Post a Comment