Wednesday 24 June 2020

செ.மு.சாதித்தவைகள்எத்தனையோ?*_ஆர்.அருள்ராஜ்.

தோன்றில் புகழோடு தோன்றுக"என்றார் அய்யன் வள்ளுவன்.
இப்புவியில் எல்லாருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பது அரிது.சிலருக்குத்தான் கிடைக்கும்.அந்தப்பட்டி யலில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி.யும் ஒருவர் ஆவார். சேலம் மாவட்டம் கொல்லிமலை அடிவாரம் மரூர்பட்டி. என்ற ஊரில் பிறந்தவர் ஒரு கிராமத்தில் துவக்கப்பள்ளியில் இடைநிலை தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். 
ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டச் செயலாளராக.பணியாற்றினார்.பின்னர் ஆசிரியர் கூட்டணியின் ஸ்தாபகர் *மாஸ்டர் இராமுண்ணியால் அடையாளம் காட்டப்பட்டு மாநிலப்பொதுச்செயலாளராக.பணி ஏற்றார்.அன்று முதல் இன்றுவரை ஆசிரியர்களுக்காக ஓயாத பணியை எந்த பிரதிபலனும் எதிர்பாராது.தொய்வின்றி செய்து வருகிறார் இரு முறை தமிழ்நாடு சட்டமன்றமேலவை உறுப்பினராகதேர்ந்தெடுக்கப்பட்டு பல சாதனைகளை ஆசிரியர்களுக்கு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் ஒன்றியம் அக்காநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உதவியாசிரியையாகப் பணி செய்து வந்தவர் திருமதி.ஜெயச்செல்வி என்பவர்.இவரது கணவர்*சென்னையில் அரசு பேருந்தில் நடத்துனராக பணிசெய்து வருபவர். இவருவரும் மாறுதலுக்காக பலமுறை முயன்றும் மாறுதல் கிடைக்கவில்லை.நமது பொதுச்செயலாளர்
செ.முத்துசாமி அவர் களிடம் அவர்களது நிலையை சொன்ன பின்பு அவர்களுக்காக முயற்சி செய்து உதவி ஆசிரியை திருமதி.ஜெயச்செல்வி அவர்களுக்கு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்கு ,மாறுதல்.வாங்கிக் கொடுத்து பிரிந்து வாடிய கணவன் மனைவி ஒரே இடத்தில் பணிபுரிய மாறுதல்*வாங்கிக் கொடுத்தவர்.இப்போது அந்த தம்பதியருக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்து ஒரு மாதந்தான் ஆகிறது.இது பெரும் மகிழ்ச்சிக்குரிய. செய்தியாகும். 

ஒட்டபிடாரம் ஒன்றியம் தெற்கு வீரபாண்டியபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர கைத்தொழில்.(P.V.T) ஆசிரியையாக பணி செய்பவர்*திருமதி.கு. கனகலட்சுமி*என்பவர் முழுநேர ஆசிரியராக அரசு தேர்வு நடத்தியதில் தேர்ச்சி பெறவில்லை.தொடர்ந்து பகுதி நேர ஆசியராகவே பணி செய்து வந்தார் .பின் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி.மூலம் அரசுக்கு விண்ணப்பம் கொடுத்து மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.தற்போது முழு நேர கைத்தொழில் ஆசிரியையாகஇடைநிலை ஆசிரியர் ஊதியம் பெற்று வருகிறார்.இந்த ஆசிரியையின் வாழ்க்கைக்கு முழுதீபம் ஏற்றியவர் *நம் பொதுச்செயலாளர் செ.மு.*தான்.

இன்னும் எத்தனையோ செய்திகளைச் சொல்லலாம்.தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுக்கு செ.மு.செய்த சேவை ஏராளம் இன்னும் செய்ய காத்துக்கொண்டு இருப்பவர்.எனவே அவர் கள் பல்லாண்டு வாழவும்.இன்னும்
அவர்கள் சேவை வளரவும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.
எழுதியவர்:-
ஆர்.அருள்ராஜ்.
தூத்துக்குடி மாவட்ட
தலைவர்.
15-வது மாநில மாநாட்டு
சிறப்பு மலரிலிருந்து
நாள்-13-08-2000.
தகவல்:-
செ.வடிவேலு.

No comments:

Post a Comment