Friday 10 July 2020

செ.மு ஒரு கலங்கரை விளக்கம்- எழுதியவர்:- எம்.எல்.வெங்கடேசன்

மனித வாழ்வியல் நோக்கத்திற்கு ஆதாரமாக விளங்கும்
அறிவையும்,ஒழுக்கத்தையும் கல்வி மூலம்
வழங்கும் ஆற்றல் படைத்தவர்கள் ஆசிரியப் பெருமக்கள்
ஆவார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்விப் பணியில் கற்பகக் கனியாக விளங்கும்
ஆசிரியச் சமுதாயத்தில்
வலம்புரி சங்காக
மிதந்து திகழ்பவர் தான்
செ.முத்துசாமி அவர்கள்
சுமார 27 ஆண்டுகளுக்கு முன்பு
அண்ணார் அவர்கள்
தமிழ்நாடு ஆசிரியர்
கூட்டணி அமைப்பில்
பொதுச்செயலாளராக பொறுப்பேற்று பணி
யாற்றி வருகிறார் என்று சொன்னால்
வினைத்திட்பம் என்பது
ஒருவன் மனதிட்பம்
மற்றைய எல்லாம் பிற என்ற
வள்ளுவரின்
திருக்குறளுக்கு ஏற்ப,
அவரது சிந்தனையும்
செயலும் ஒன்றாக
அமைந்ததே அதற்கு
காரணமாகும்
அண்ணாரது பணியை
எண்ணிப் பார்க்கையில்
ஆசிரியச் சமுதாயத்திற்கு
செய்த சேவை
இமாலய சாதனை
என்றே கூறலாம்.
திரு.செ.முத்துசாமி
அவர்களது இடையறாத
உழைப்பும்,இடையறாத
முயற்சியும்,இடையறாத
பயிற்சியுமே ஆசிரியச்
சமுதாயம் கண்ட பல
இன்னல்களையும்
இடையூறுகளையும்
விலக்கிட ஆயுதமாக
அமைந்தது என்று
சொன்னால் அஃது
மிகையாகாது
அதோடு மட்டுமல்லாமல்
ஆசிரியப் சமுதாயத்தின்
இல்ல சுக துவக்கத்திலும்
பங்கெடுத்து குடும்பப்
பாச உணர்வோடு
ஓடோடி வந்து ஒருங்கிணையும்
பண்பாளராகவும்,
அவ்வப்போது தமது
எண்ணங்களை
கல்வித்துறைக்கு
வழங்கி வந்த ஆலோசகராகவும்
சிறந்து விளங்கி
வருபவர்
இத்தகைய போற்றுதலுக்கும்,
பாராட்டுக்குரிய
செ.முத்துசாமி
ஐயா அவர்களுக்கு
இன்று ஆசிரிய சமுதாயத்தால்
எடுக்கப்படும்
இவ் வெள்ளிவிழா
மாநாடு இன்றைய
செய்தியாக இருக்கலாம்
ஆனால் நாளைய
,வரலாறு என்பது
என்பதை எண்ணி
பார்க்க வேண்டும்.
அவரிடம் உள்ள
கலை உள்ளமும்
தொண்டுள்ளமும்
நிரந்தரமாக இருக்கும்
வரை,ஆசிரியச் சமுதாயத்தின் ஒட்டு
மொத்த குரல் ஆதரவாக ஒலிக்கும்
வரை என்றைக்கும்
செ.முத்துசாமி அவர்களை
காலத்தாலும், அரசியல்
காற்றாலும் அணைக்க
முடியாது
ஏனெனில் அவர்
கல்வித்துறையின்
கலங்கரை விளக்கம்
எழுதியவர்:-
எம்.எல்.வெங்கடேசன்
மாநில துணைச் செயலர் தமிழ்நாடு
காந்திமன்ற இயக்கம்
தகவல்:-
செ.வடிவேலு
(பொன்விழா மலரிலிருந்து 07/10/1995)

No comments:

Post a Comment