Friday 10 July 2020

செ.மு.வின் செயல் மிக்க சீர்மிகுந்த தொண்டினை நினைவு கூர்கிறோம் எழுதியவர்:- அ.ஜகதீச செட்டி

ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுவை
அன்று கோட்டையில்
ஆண்டவர்களிடம்
கொடுத்த போது
"அடக்கி விடுகிறோம்" எனக்
கூறிய ஆட்சியாளர்கள்
ஆசிரியர்களை சிறையில் அடைந்ததை நினைவு
கூர்கிறோம்
வேலை போய்விட்டது
வேலை போய்விடும்
என அரசு கூறி வேதனையை ஏற்படுத்திய போதும்
அச்சமில்லை அச்சமில்லை எனக்
கூறிய ஆரம்பப் பள்ளி
ஆசிரியர்களை
நினைவு கூர்கிறோம் சிறையின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல் வீரர்
களாக நடந்து கொண்ட
ஆசிரியர்களை நினைவு கூர்கிறோம்.மருத்துவ
வசதி குறைவாக இருந்தபோதும் மனம்
தளராது இருந்த ஆசிரியர்களை நினைவு கூர்கிறோம்.
 நீரை காய்ச்சி கொடுக்க
வசதி இல்லை என
காவலர்கள் கூறிய போது
நீரை காய்ச்சிக் கொடுக்கிறோம்
அருந்துங்கள் என்று கூறிய
காவலரின் மனைவியரை நினைவு கூர்கிறோம்.
சோர்ந்து கிடந்த ஆசிரியர்களை
ஒன்று சேர்த்து
செயல் வீரர்களாக
நடக்கச் செய்த
செயல் வீரர்
செ.முத்துசாமியே
,உன் செயல்மிக்க
சீர்மிகுந்த தொண்டினை
அ.ஜெகதீசனும் கோவிந்தராஜனும்
நினைவு கூர்கிறோம்.


எழுதியவர்:-
அ.ஜகதீச செட்டி
முன்னால் தலைவர்
ஓமலூர் வட்டாரம்
சேலம் மாவட்டம்.
தலைவர்:-
செ.வடிவேலு.

No comments:

Post a Comment