Friday 22 May 2020

*வாழிய நீவீர் வாழ்க ஒரு நூறாண்டு* மா.ச. முனுசாமி முன்னாள் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


ஆசிரியர் கூட்டணி என்பது அலங்கார சொல் அல்ல ஆசிரியர்களின் சங்கநாதம் ஆதலால்தான் ஆசிரியர்கள் அமைப்புகள் பல பதாகையின்  கீழ்   அணி பிரிந்தாலும் இறுதியான ஆசிரியர் கூட்டணி என்றே அழைக்கின்றனர் 

தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் ஆசிரியர் இயக்கத்தை உருவாக்கி கால் நூற்றாண்டுகள் பொதுச்செயலாளராக தொண்டாற்றிய   மாஸ்டர் இரா முண்ணி அவர்களால் நேர்முக உதவியாளராக அடையாளப்படுத்தி மாஸ்டருக்கு அடுத்த பொதுச் செயலாளர் என்ற பெருமை பெற்றவர் சேந்தமங்கலம் 
செ.முத்துசாமி
 

ஆசிரியர் பணியில் இளையவர்களின் நியமனம் நிகழ்ந்த காலகட்டத்தில் இயக்கத்தை எழுச்சியுடன் வழிநடத்தியவர் செ.முத்துசாமி

 1968ல் அமைச்சர் பங்கேற்ற மதுராந்தகம் வட்ட. மாநாடு பொதுச்செயலாளர் செ.மு பேண்ட் அணிந்து இருந்தார் கலாச்சாரத்தின் படி வேட்டி அணிய கேட்டுக்கொண்டோம் தன்னிடம் இல்லை என்றார்.  இருவரும் கடைக்குச் சென்று வேட்டி. வாங்கி அணிந்தவுடன்    எனது ஆடையை மாற்றி விட்டீர்கள்    என்று புன்முறுவல் செய்த நிகழ்வு   இனிமையானது

1970இல்  மதுரையில் மாஸ்டர்  மணி விழா மாநாடு .  அன்றைய அஞ்சலில் வந்த இயக்க இதழில் கருங்குழி முனுசாமி     மாஸ்டர்சுடர் ஏந்தி  வருகிறார் என எழுதப்பட்டிருந்தது அச்சத்துடன் சென்னை சென்று சந்தித்தேன் இப்படி எழுதி உள்ளீர்களே என்று எனது கருத்தை முடிப்பதற்குள் இதற்கு தேவையான நிகழ்வு பொருத்தமானவரும்.  நீங்களே    என்று நம்பிக்கை கூறி பணித்தார்    சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து    ஒளியூட்டப்பட்ட.  சுடரை.  5 நாட்கள் சைக்கிளில் பயணித்து மாநாட்டு மேடையில்  மாஸ்டரிடம் ஒப்படைத்த நிகழ்வு எனது இயக்கப் பணியில் படிக்கல்.  பொதுச் செயலாளர் முத்துசாமி அவர்களின் நம்பிக்கைக்கு மைல்கல்

1972 ல். தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்றது 17 நாட்கள் போராட்டம் 18 நாட்கள் சிறைவாசம் பொதுச்செயலாளர் செ.மு, மாஸ்டர், மற்றும் இயக்கத்தின் முன்னணியினர்   1020 ஆசிரியர்கள் சென்னை மத்திய சிறையில் வாடினார்    இந்த போராட்டத்தை வழிநடத்தும் போராட்டக் குழு உறுப்பினராக செயல்படும் வாய்ப்பை பெற்றேன்

 போராட்ட. நாளுக்கு முன்னாள்.  தந்தி மூலம் சென்னைக்கு 
அழைத் தனர்  நாளை கல்வி அமைச்சரை சந்திக்க.  செல்கிறோம்    அரசின் அணுகுமுறை தெரியவில்லை அவசியமெனில் போராட்டக் குழு உறுப்பினராக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தனர்   போராட்ட இறுதி நாளின் நள்ளிரவில் விடுதலையான ஆசிரியர்களுக்கு சத்தியமூர்த்தி பவன் தங்குமிடம் ஆனது.      போராட்ட அனுபவங்களை கற்றிட. வாய்ப்பளித்து எனது    சங்க செயல்பாடுகளை பட்டை தீட்டினார். செ.மு

1973 கோவையில் நடைபெற்ற வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்ட மேற்கு வங்க மாநில ஆரம்ப ஆசிரியர் சங்க தலைவர் களின் அழைப்பை ஏற்று கோரக்பூர் நகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் பொதுச் செயலாளர் தலைமையில் பிரதிநிதிகளாக கலந்து கொண்டு பல அனுபவங்களை பெற்றோம்

 வாக்குரிமை அற்ற ஆரம்பப்பள்ளி ஆசிரியர் செ.மு.  அவர்கள் தனது பேச்சாற்றலால், போராட்டத்தால் ,12 ஆண்டுகள் சட்ட மேலவை உறுப்பினர் ஆகி ஆற்றிய பணிகள் நீங்காத நினைவுகளாகும்

திரு.செ.மு  அவர்களுடன் மாநிலத் துணைச் செயலாளராக இணைந்து பணியாற்றிய அனுபவம் பசுமையானது

வாழ்நாள் முழுவதும் கூட்டு இயக்கத்தை வலுப்படுத்தி.  ஆசிரியர்,  கல்வி, சமுதாய நலன்களை பாதுகாத்திடும் சமூகப் போராளியாக திகழ்ந்திட. விழைகிறோம்

* *வாழ்த்துக்கள்*
*போர் குணம் நிலைக்கட்டும்* 
*பெருமை சிறக்கட்டும் வாழ்க நீவீர் வாழ்க ஒரு நூறு ஆண்டு*

தகவல்
சு.ம.பாலகிருஷ்ணன்

No comments:

Post a Comment