Tuesday 5 May 2020

தொலைநோக்கு உணர்வுடையவர் செ.மு

உதாரணமாக 1977லே ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என முழக்கமிட்டபொழுது, நம்மை ஏளனமாய் பார்த்தவர்கள்-மத்திய அரசு அதைக்கொள்கை யாக ஏற்று-"போனஸ் என்பது கொடுபடாத ஊதியமே-லாபத்தில் பங்கு அல்ல" என தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய பொழுது-
நமது பொதுச் செயலரின் தொலைநோக்கு உணர்வைக் கண்டு ஆசிரியர் உலகம் வியந்தது.

மத்திய அரசின் கொள்கையை ஏற்று மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு போனஸ்-வழங்கிய பொழுது,தூற்றிய வாய்கள் போற்றிப்பாட ஆரம்பித்தன.

ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பை அரசுக்கு ஒப்படைப்பு செய்து ஆண்டிற்கொருமுறை ஊதியம் பெற வழிவகுத்தார்

.வீட்டுவாடகைப்படி என்றால் என்னவென்று அறியாத கிராமப்புற ஆசிரியர்களுக்கு"கிராம ஊக்கப்படி"என்ற பெயரில் வீட்டு வாடகைக்கான பாதையைக் கண்டவர் அய்யா செ.முத்துசாமி.

எழுதியவர்:
மறைந்த ஆசிரியர் நாமக்கல்சதீஷ்
 சேலம் மாவட்ட துணைச் செயலர்
தகவல்:செ.வடிவேலு.

No comments:

Post a Comment