Wednesday 20 May 2020

*எளிமையின் சின்னம் செ.மு..

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி! *தமிழ்நாடு ஆசிரியர்க்கொரு தலைவன் செ.மு.*

அரண்மனைகளிலும் மடாலயங்களிலும் தவழ்ந்த தமிழை மக்கள் 
மன்றத்திற்கு கொண்டுவந்தவர் பாரதியார்.
*செல்வத்திலும் செல்வாக்கிலும்* *மிக்கவருக்கே என்றிருந்த* *மேலவையை எளியருக்கு எளியராய்ச்*
*சென்று* *அலங்கரித்தவர்*
*எமது* *பொதுச்செயலர்* *செ.மு*

" The fighting Warrior Of Teacher" என்னும் புகழ்பெற்று ,
ஆசிரியர் கோரிக்கை என்று வரும்போது பாரதப் பிரதமர் முன்னிலையிலும் சரளமான ஆங்கிலத்தில் தடையின்றி வாதிட்டு, *தன்னேரிலாத் தலைவராய் திகழ்ந்த அவர்*
 ஆசிரியர்களிடம் எளிமையாக நடந்து கொள்ளும் விதம் யாவரும் அறிந்ததே.

 1978 ல் *இரண்டாம்* *முறையாகத் தேர்தலில்* *வெற்றி பெற்று* *மேலவையில் முத்திரை பதித்து வந்த காலம்*, ஒரு முறை கோவை மாவட்டப் பயணம் வந்து விட்டு அவிநாசி வட்டாரக் கிளை அலுவலகம் வந்திருந்தார். 
*பேருந்து நிலையம் வரை சென்று அவரை வழியனுப்பி வர நான் அனுப்பப்பட்டேன்*

V.V.I.P.ஆன அவர், 
*தமது கைப்பெட்டியை ஆசிரியப் பணியில் புதியவனான, மிக இளையவரான என்னிடம் கூடத் தராமல் தாமே சுமந்து கொண்டு 1 கி.மீ.தொலைவு நடந்து வந்தார்*

அரசு பேருந்தில் ஏறி ஊர் புறப்பட்டார்.
உன்னதத் தலைவரின் எளிமைத் தன்மை கண்டு நெஞ்சார வணங்கினேன்.அவரது சேவை தொடர்ந்து ஆசிரியச் சமுதாயத்திற்குக் 
கிட்ட வேண்டும் என இறைவனிடம் பிராத்திக்கிறேன்

.வாழ்க அவர் சேவை! வளர்க ஆசிரியர் நலன்!


ஆக்கம்: *எஸ்.கோவிந்தசாமி, பிஏ, எம்எட்.*
*மேனாள்* *வட்டார செயலர், அவிநாசி.*

தகவல்: செ.வடிவேலு.

No comments:

Post a Comment