சேலம் மாவட்ட அமைப்பில் பொறுப்பேற்றுக் செயல்பட்டு வந்த நிலையில்,1967 சேலம் மாவட்ட மாநாட்டிற்கு அறிஞர் அண்ணாவை அழைக்க சென்னை வந்து அவரை சந்தித்த போது என்னை அழைத்து நடத்துமாறு சொல்ல அவ்வாறே என்னை அழைத்து சென்றார்.மாநாட்டில் பங்குகொண்டேன். அந்த நாள்முதல் அவரை நான் அறிவேன்.ஆசிரியர்களின் உரிமை காப்பதில் சிறிதும் விட்டுத்தராமல் தமது கோரிக்கைகளை வலியுறுத்தி வாதாடுவதிலும் முன்னின்றவர்.அவர் சட்டமன்ற மேலவையில் தேர்தல் மூலம் இடம் பெற்றுச் சிறப்பாக கடமையாற்றியவர்.
அவரது பணியை முத்தமிழ் அறிஞர் கலைஞரே பாராட்டியுள்ளார்.திரு.செ.முத்துசாமி அனைத்துக் கட்சியினரிடமும், அமைச்சர்களிடமும் வேறுபாடின்றி பழகும் பக்குவம் பெற்றவர்.எப்பொழுதும் புன்முறுவல் பூத்த முகம்,மாறுபடினும் மரியாதை குன்றாத பேச்சு,இனிய செய்திகளை நினைவூட்டி மகிழவைத்து, ஆசிரியர் குறைகளை எடுத்துக்கூறி, தகுந்த முடிவுகளைக் காணச் செய்யும் திறமை, இவைதான் முத்துசாமியின் ஆளுமைத் திறனுக்கு அடிப்படையாகும்.
பேராசிரியர்.க.அன்பழகன்
ஆசிரியர் இயக்க வரலாறு நூலிலிருந்து
...செ.வடிவேலு .இயக்கத்தொண்டன்
...செ.வடிவேலு .இயக்கத்தொண்டன்
No comments:
Post a Comment